ஸ்ரீமுக முத்ரை மற்றும் பிருதாவளி

ச்ருங்கேரி என்ற பெயரொட்டுடன் திகழும் பல்வேறு மடங்களின் ஸ்ரீமுக முத்ரை மற்றும் பிருதாவளி பற்றிய ஆய்வுக் குறிப்புகள் (தொகுப்பு …1)

ஆந்திரம்-கர்நாடகம்-மஹாராஷ்ட்ரம் ஆகிய மூன்று பிரதேசங்களிலும் “ச்ருங்கேரி” என்ற பெயரொட்டுடன் புகழுடன் விளங்கும் மடங்கள் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

இந்த மடாதிபர்களின் ஸ்ரீமுக முத்ரை மற்றும் பிருதாவளி ஆகியன அனைத்தும் ஒரேமாதிரியான பெயர் மற்றும் சொற்களுடன் இருப்பது இந்த மடங்கள் யாவும் சமமான அந்தஸ்துடன் முற்காலந்தொட்டு போற்றப்பட்டு வந்துள்ளமைக்குச் சான்று பகர்கின்றன.

இத்தொகுதியில் தரப்படும் ஸ்ரீமுக முத்ரை, பிருதாவளி மற்றும் ஆய்வுக் குறிப்புகள் ஆகியனவற்றால் இந்த மடங்கள் தோன்றிய காலம், மரபு, வளர்ச்சி மற்றும் இவற்றிற்கு அந்தந்த பிரதேச மன்னர்கள் அளித்துள்ள சமமான அந்தஸ்து ஆகியன எளிதின் விளங்கும்.

மேலும் ஸ்ரீமுக பிருதாவளிகளில் ஒரே வகையினவாகக் காணப்படும் இவ்வணிகள் யாவும், தமது இருப்பிடத்தின் பெயரை முன்மையாகவும், ச்ருங்கேரி என்ற இணைப்பையும் ஏற்றுவந்துள்ள எந்த ஒரு குறிப்பிட்ட மடத்துக்கும் மட்டுமே சொந்தமானவை என்று சொல்வோரின் அறியாமையை நமக்குத் தெற்றெனப் புலனாக்கும்.

இத்தொகுப்பில் முதலாவதாக ஸ்ரீபுஷ்பகிரி ச்ருங்கேரி மடாதிபர்களின் ஸ்ரீமுக முத்ரை பிருதாவளி இங்கு தரப்பட்டுள்ளது.

“ஸ்ரீ வித்யா சங்கர”

(அ) சதுர வடிவிலான முத்ரையிலுள்ள சொற்கள் :-

“ஸ்ரீச்ருங்ககிரி ஸ்ரீவிரூபாக்ஷ – ஸ்ரீபுஷ்பகிரி ஸ்ரீஆலம்புரி – ஸ்ரீவித்யாசங்கர கரகமல-ஸஞ்ஜாத. “

(ஆ) ஸ்ரீமுக பிருதுகளில் சிலவற்றின் பொருள் :-

“வ்யாக்யான ஸிம்ஹாஸனத்தின் அதிபரும், கர்னாடக ஸிம்ஹாஸனத்தை நிறுவிய, துங்கபத்ராதீரவாஸியான, ச்ருங்ககிரி, விரூபாக்ஷ, புஷ்பகிரி, ஸ்ரீசைல, ஆலம்புரி முதலிய அனைத்து பீடங்களின் அதிபதியான ….”

ஸ்ரீசங்கரபகவத்பாதர்களும் ஹிந்துமத ஒற்றுமையும்.. 2

ஒரே ஸத்வஸ்து பல பேதங்களையும் பெயர்களையும் அடைய வேண்டுமென்றால் அது எப்படி முடியும் ? என்பதையும் ஸ்ரீபகவத்பாதர் விளக்குகிறார். ஒரே ப்ரஹ்மம் நிர்குணம் ஸகுணம் என்று இரண்டாக உள்ளதனால், உலக ஸம்பந்தம் வரையில் ஸகுணமாகும் ; தனி ஸ்வரூபத்தில் நிர்குணமாகும் என்பதை, பாஷ்யம் முதலான கிரந்தங்களில் நிலைநாட்டியுள்ளார். இவ்வாறே ஸாங்க்ய நையாயிக தர்சனங்களை அலசிப் பார்த்தால் இவை எல்லாவற்றையும் உள்ளடக்கித் தனியாகப் பிரகாசிப்பது அத்வைதம்தான் என்பதையும் கிரந்தங்களின் வாயிலாகப் பல பிரபல பிரமாண யுக்திகளுடன் நிலைநாட்டியுள்ளார். இவ்வாறான பெருமுயற்சிகள் எல்லாமே ஹிந்துமத ஒற்றுமையை ஸ்தாபிப்பதற்குத்தான் என்பதில் ஐயமில்லை.”ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காகவும் எல்லா வழிகளிலும் ஒன்றைப் பார்ப்பதற்காகவுமே வாழ்க்கையை அர்ப்பித்தவன் என்று ஸ்ரீசங்கர பகவத்பாதர் தம்மைத் தைத்திரீய உபநிஷத் பாஷ்யத்தில் கூறிக் கொள்ளுகிறார். ” यन्मां एकयोगिनं अनेकयोगिप्रतिपक्षिणमात्थ । ஒற்றுமையை நாடும் என்னை வேற்றுமையில் ஈடுபடும் பலரின் எதிரியாக இருப்பதாகக் கூறுகிறீர்கள் ” என்கிறார்.ஸ்ரீசங்கரபகவத்பாதர் காட்டிய இந்த மனப்பான்மையை, இக் காலத்தில் உள்ள எல்லா மதத்தினரும் பின்பற்ற வேண்டும். அவருடைய மற்ற கொள்கைகளை ஒப்புக்கொள்ளாதவர்களுங்கூட இந்த ஒற்றுமை மனப்பான்மையைப் பின்பற்ற வேண்டுகிறோம்.(நன்றி: ஸ்ரீகாமகோடி ப்ரதீபம், 1969 )

ஸ்ரீசங்கரபகவத்பாதர்களும் ஹிந்துமத ஒற்றுமையும் .. 1

பாரத தேச மக்களிடம் கருணை காரணமாகவே தெய்வம் அவ்வப்போது சில பெரியோர்களை நம் நாட்டில் அவதரிக்கச் செய்து வருகிறது. அந்த மகான்கள் ஹிந்து மத ஒற்றுமைக்காகத் தம் வாழ்க்கையையே அர்ப்பித்திருக்கிறார்கள். இவ்வாறு அவதரித்த மஹான்களில் மிகச் சிறந்தவர் ஸ்ரீசங்கர பகவத்பாதர் எனக் கூறின் மிகையாகாது.

வேதத்தின் அடிப்படைப் பிரமாணத்தை முதலில் அவர் ஸ்தாபிக்க முயன்று வெற்றியும் கண்டார். வேதங்களின் பொருளை ஆராய்ந்த பெரியோர்களிடத்தில் கண்ட வேற்றுமைகளிலும் ஸ்ரீபகவத்பாதர் ஒற்றுமையைக் கண்டு, இதை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பெருமுயற்சி செய்தார்.ஹிந்து மதத்தைப் பின்பற்றுபவர்களின் வழிபாட்டு முறைகளை ஆராய்ந்து, இதில் ஆறு வழிகள் முக்கியமாக இருப்பதைக் கண்டு, இந்த ஆறு வழிபாடுகளிலும், ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பெயர் கொண்ட தெய்வம் காணினும் எல்லாமாக முடிவில் ஒரே தெய்வம்தான் என்ற உண்மையை அவர் மக்களிடையே பரப்பலானார்.

பல வழிபாடுகளை ஆறு வழிபாடுகளாக ஆக்கி, அவையும் ஒரே கடவுள் தத்துவத்தைத்தான் நோக்காகக் கொண்டுள்ளன என்ற பேருண்மையை ஸ்ரீசங்கரபகவத்பாதர் கண்டதனாலும், அநேக மதங்களில் இருந்த அவைதிகமான ஆசாரங்களை நீக்கி, நடைமுறையில் இந்த ஆறு மதங்களைக் கைக்கொள்ளச் செய்ததனாலும் அவருக்கு ‘ஷண்மத ஸ்தாபனாசார்யர் என்ற பிரசித்தி அவர் காலம் தொடங்கியே ஏற்பட்டது.

ஷண்மத ஸ்தாபனார்சார்யர் என்ற பெயர் அவருக்கு உள்ளதனால், அவர் ஆறு மதங்களைப் புதிதாக ஸ்தாபித்தார் என்று கொள்ளலாகாது. அவ்வாறு அவரோ அவரைப் பின்பற்றுகிறவர்களோ சொல்லவும் இல்லை. ஸ்ரீசங்கரபகவத்பாதர் தமது காலத்தில் எழுபத்திரண்டு மதங்களாகப் பிரிந்து இருந்தவற்றை ஆராய்ந்து, அவற்றில் பலவற்றைத் தள்ளியும், கடைசியாக அடிப்படையாகச் சைவம், வைஷ்ணவம், காணபத்யம், சாக்தம், கௌமாரம், ஸௌரம் என்ற ஆறே முக்கிய மானவை என்று தீர்மானித்தும் இவற்றைப் பரப்பலானார்.

இந்த ஆறு மத வழிபாட்டின் பெருமைகளை ஸ்ரீபகவத்பாதர் தம்முடைய கிரந்தங்களினால் நன்றாகத் தெளிவுபடுத்தி இருக்கிறார். ஆனால், பல இடங் களில் – குறிப்பாக ‘ஹரிமீடே’ ஸ்தோத்ரம் போன்றவற்றில்- “ஒரே ஸத்தான பொருளுக்குத்தான் சிவன், விஷ்ணு, சக்தி, கணபதி, ஆதித்யன், குமாரன் என்றெல்லாம் பெயர்” என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.

(நன்றி: ஸ்ரீகாமகோடி ப்ரதீபம், 1969)

Kailasa Prasthana Sthala

How does the Kailasa Prasthana Sthala of Pujyashri Shankara Bhagavatpadacharya at Kedarnath differ from His Samadhi Sthala in Kanchipuram?

Kedardham is only the Kailasa-prasthana-Sthala of Pujyashri Shankara Bhagavatpadacharya. There is no mention of leaving His mortal coil behind and its burial at that place in the biographies of the Great Acharya. Kedarnath is not the Samadhi-sthala of Pujyasri Sankaracharya. (Dr.V.Kutumba Sastry, Former Vice Chancellor, Central Sanskrit University – D.D Special Broadcast, 2021)

भगवत्पाद श्रीआद्यशङ्कराचार्य का काल-निर्धारण एवं दीक्षास्थान

भगवत्पाद श्रीआद्यशङ्कराचार्य का काल-निर्धारण एवं दीक्षास्थान – महामहोपाध्याय प्रो. जयप्रकाशनारायण द्विवेदी (विद्यावाचस्पति)

शङ्कराचार्य-सन्देश ( अप्रैल – जून २०१८)

Virupaksha Sringeri Sankaracharya’s tour

This 1936, news publication brings attention to the diverse history of mathas across South India challenging the notion that Tunga matha was the only principal institution for the South.

A careful examination of historical records of these ancient mathas reveals the varied history of Shankarite institutions, emphasizing the need to avoid portraying others as mere branches of Tunga matha and promoting unity within the Shankara Sampradaya.

குடந்தையுள் காஞ்சி – அணிந்துரை

“..காலங்காலமாக எழுதப்பட்டு வரும் வரலாற்றில், காலத்தின் கண்ணாடியாக விளங்கும் வரலாற்றில், சில வேளைகளில் சிலரின் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப பொய்மையும் மெய்ம்மைப் புனைவு கொண்டு வந்து விடுவது உண்டு. வரலாற்று ஆய்வாளர்கள் கள ஆய்வு (Field Research) செய்து பொய்மைகளைப் புறம் தள்ளி மெய்ம்மை மேலோங்கச் செய்ய வேண்டும்…

இந்தியத் திருநாட்டில் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கேற்ப அயலார் ஆட்சியும், அந்நியர் ஆதிக்கமும் ஏற்பட்டு நம் தொன்மைச் சமயங்களுக்கும், சமய மடங்களுக்கும் தொல்லைகள் ஏற்படத் தொடங்கின. மண்ணையும் மாண்புறு தத்துவங்களையும், மக்கள் சமுதாயத்தையும் காக்க வேண்டி நம் சமயத் தலைவர்கள் மடங்களின் இருப்பிடங்களை, வழிபாட்டிடங்களைத் தற்காலிகமாக மாற்றிச் சமயத்தையும், மடத்தையும் காத்து வந்துள்ளனர். இவ்வாறு தெய்வத் திருமேனிகளையும், தெய்வப் பனுவல்களையும் அந்நியர்களிடமிருந்து காத்து வைக்க நம் முன்னோர்கள் அரும்பாடுபட்ட உண்மை நிகழ்ச்சிகளை வரலாறு நன்கறியும். இந்நெறியில் காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகளின் ஸ்ரீ மடத்துக்குரிய ஒரு மடம் குடந்தையில் உள்ளது. சமுதாயச் சூழல் காரணமாக காஞ்சி ஸ்ரீ சங்கராசார்ய மரபினர் சற்றேறக் குறைய 200 ஆண்டுகள் குடந்தையில் இருந்து சமயப்பணிகளும், சமுதாயப் பணிகளும் ஆற்றியுள்ளனர்…

அருளியல் நோக்கில் ஆதிசங்கரரால் அமைக்கப்பட்ட மடங்களுள் ஒரு சில பிற்காலத்தில் எண்ண மாற்றத்தின் காரணமாய் முதன்மை ஸ்ரீமடமான காஞ்சி மடத்தின் தொன்மைச் சிறப்பை அறியாமல் மனமாறுபாடு கொண்டனர்…

ஆதிசங்கர பகவத் பாதர் தம் இந்தியச் சுற்றுப் பயணங்களில் தேவைப்பட்ட இடங்களில் எல்லாம் மடங்களை நிறுவித் தம் பணியினைத் தொடரத் தம் சீடர்களை நியமித்துள்ளார். இவ்வாறு ஸ்ரீ சங்கரரால் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் மடங்கள் நிறுவப்பட்டன…”

– பேரா. டாக்டர். நாகப்பா நாச்சியப்பன் அவர்களின் அணிந்துரையிலிருந்து – புலவர்.வித்வான்.வே.ம.அவர்களின் குடந்தையுள் காஞ்சி, வரலாற்றாய்வு நூல்.

Shri Kanchi Kamakoti Matha’s Ancient Legacy Unveiled – Insights from the 1962-63 Survey, Predating the Common Era: 1

Shri Kanchi Kamakoti Matha’s Ancient Legacy Unveiled – Insights from the 1962-63 Survey, Predating the Common Era: 1

In 1962, Dr. R. Subrahmanyam of the Southern Circle of the Archaeological Survey conducted a trial-excavation in the premises of Shri Kanchi Kamakoti Shankaracharya Matha in Kanchipuram, drawing on insights from B.B. Lal, Director General of the Archaeological Survey of India.

This exploration unveiled the ancient roots of Shri Kanchi Kamakoti Peetha tracing back to the pre-Christian era. The excavation yielded pottery and antiquities datable to the early historical period. Though the excavation was limited to a small area it brought to light layers containing megalithic ware, rouletted ware, amphorae, a terracotta mould of punch-marked coins and a few terracotta figurines as well as Satavahana and Pallava coins, including one from Rajaraja Chola I (A.D. 980-1014). This also prompted further investigation into the Matha’s own antiquity.

It is also important to note that no such ASI excavations, similar to those conducted in the premises of Moolamnaya Kanchi matha in Kanchipuram in 1962 and later, have taken place in Tunga or other amnaya mathas which raises questions about their own history and authenticity of their claims against Kanchi matha

ச்ருங்கேரி மடம் எது?

ஆதிசங்கரர் துங்கபத்ரையின் கரையருகில் இருக்கும் ச்ருங்கேரியில் ஒரே ஒரு மடம் அமைத்தார். ஆனால் பிற்காலத்தில் அதனுடன் தொடர்புடைய எட்டு மடங்களும் தம்மைச் சிருங்கேரி மடங்கள் என்றே எனக் கூறிக் கொள்வதை ஆவணங்கள் காட்டும். இந்த எட்டு திருமடங்களுள் தொன்மையானது எது என்பதும் ஆய்வுக்குரியது.

1. கூடலி ச்ருங்கேரி,

2.துங்கா ச்ருங்கேரி,

3.ஆமனி ச்ருங்கேரி,

4.விரூபாக்ஷ ச்ருங்கேரி,

5.புஷ்பகிரி ச்ருங்கேரி,

6.சிவகங்கா ச்ருங்கேரி,

7.கரவீரம் ச்ருங்கேரி மற்றும்

8. சங்கேச்வரம் ச்ருங்கேரி

ஆகிய இவ்வெட்டு திருமடங்களுமே வரலாற்றுப் போக்கில் தம்மை ச்ருங்கேரி மடங்கள் எனக் கூறிக்கொள்கின்றன. இவற்றுள் சில காலப்போக்கில் நலிவுற்றன கூடலி, துங்கா மற்றும் புஷ்பகிரி மரபுகள் இன்றும் நிலைபெற்றுச் சமயப்பணிகள் புரிகின்றன.

எந்த மடத்திலும் அதிபதியாக இருந்திராத ஸ்ரீவித்யாரண்ய ஸ்வாமிகளால் இவ்வெட்டு ச்ருங்கேரி மடங்களும் தக்கவர்களை நிறுவிப் புனரமைக்கப்பட்டன.

கூடலி ச்ருங்கேரியும் அங்குள்ள மடத்தின் திருமரபும்

கூடலி ச்ருங்கேரி மடம் மிகத் தொன்மையானது. வித்யாநகரம், மஹாராஜதானி, ந்ருஸிம்ஹ க்ஷேத்ரம், தக்ஷிண வாராணஸீ, துங்கபத்ரா தீரம், ருஷ்யாச்ரமம், ருஷ்ய ச்ருங்க நகரம், ச்ருங்ககிரி ராமக்ஷேத்ரம், ராமேச்வரம் ஆகிய பெயர்கள் துங்கபத்ரா சங்கமத்தில் இருக்கும் கூடலி ச்ருங்கேரிக்கு உரியனவாகக் கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் பழைய வரலாற்றுக் குறிப்புகளால் அறியப்படுகின்றன.

துங்கபத்ரா கூடலி சங்கமத் தலத்தில்

ஸ்ரீசங்கரபகவத்பாதர்களால் தமது முதன்மைச் சீடர்களுள் ஒருவரான ஸ்ரீப்ருத்வீதர பாரதிக்காக ஸ்தாபித்தருளப்பட்ட தக்ஷிணாம்னாய சாரதா பீடம் பொலிவுடன் திகழ்கின்றது