ஸ்ரீசங்கரபகவத்பாதர்களும் ஹிந்துமத ஒற்றுமையும் .. 1

பாரத தேச மக்களிடம் கருணை காரணமாகவே தெய்வம் அவ்வப்போது சில பெரியோர்களை நம் நாட்டில் அவதரிக்கச் செய்து வருகிறது. அந்த மகான்கள் ஹிந்து மத ஒற்றுமைக்காகத் தம் வாழ்க்கையையே அர்ப்பித்திருக்கிறார்கள். இவ்வாறு அவதரித்த மஹான்களில் மிகச் சிறந்தவர் ஸ்ரீசங்கர பகவத்பாதர் எனக் கூறின் மிகையாகாது.

வேதத்தின் அடிப்படைப் பிரமாணத்தை முதலில் அவர் ஸ்தாபிக்க முயன்று வெற்றியும் கண்டார். வேதங்களின் பொருளை ஆராய்ந்த பெரியோர்களிடத்தில் கண்ட வேற்றுமைகளிலும் ஸ்ரீபகவத்பாதர் ஒற்றுமையைக் கண்டு, இதை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பெருமுயற்சி செய்தார்.ஹிந்து மதத்தைப் பின்பற்றுபவர்களின் வழிபாட்டு முறைகளை ஆராய்ந்து, இதில் ஆறு வழிகள் முக்கியமாக இருப்பதைக் கண்டு, இந்த ஆறு வழிபாடுகளிலும், ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பெயர் கொண்ட தெய்வம் காணினும் எல்லாமாக முடிவில் ஒரே தெய்வம்தான் என்ற உண்மையை அவர் மக்களிடையே பரப்பலானார்.

பல வழிபாடுகளை ஆறு வழிபாடுகளாக ஆக்கி, அவையும் ஒரே கடவுள் தத்துவத்தைத்தான் நோக்காகக் கொண்டுள்ளன என்ற பேருண்மையை ஸ்ரீசங்கரபகவத்பாதர் கண்டதனாலும், அநேக மதங்களில் இருந்த அவைதிகமான ஆசாரங்களை நீக்கி, நடைமுறையில் இந்த ஆறு மதங்களைக் கைக்கொள்ளச் செய்ததனாலும் அவருக்கு ‘ஷண்மத ஸ்தாபனாசார்யர் என்ற பிரசித்தி அவர் காலம் தொடங்கியே ஏற்பட்டது.

ஷண்மத ஸ்தாபனார்சார்யர் என்ற பெயர் அவருக்கு உள்ளதனால், அவர் ஆறு மதங்களைப் புதிதாக ஸ்தாபித்தார் என்று கொள்ளலாகாது. அவ்வாறு அவரோ அவரைப் பின்பற்றுகிறவர்களோ சொல்லவும் இல்லை. ஸ்ரீசங்கரபகவத்பாதர் தமது காலத்தில் எழுபத்திரண்டு மதங்களாகப் பிரிந்து இருந்தவற்றை ஆராய்ந்து, அவற்றில் பலவற்றைத் தள்ளியும், கடைசியாக அடிப்படையாகச் சைவம், வைஷ்ணவம், காணபத்யம், சாக்தம், கௌமாரம், ஸௌரம் என்ற ஆறே முக்கிய மானவை என்று தீர்மானித்தும் இவற்றைப் பரப்பலானார்.

இந்த ஆறு மத வழிபாட்டின் பெருமைகளை ஸ்ரீபகவத்பாதர் தம்முடைய கிரந்தங்களினால் நன்றாகத் தெளிவுபடுத்தி இருக்கிறார். ஆனால், பல இடங் களில் – குறிப்பாக ‘ஹரிமீடே’ ஸ்தோத்ரம் போன்றவற்றில்- “ஒரே ஸத்தான பொருளுக்குத்தான் சிவன், விஷ்ணு, சக்தி, கணபதி, ஆதித்யன், குமாரன் என்றெல்லாம் பெயர்” என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.

(நன்றி: ஸ்ரீகாமகோடி ப்ரதீபம், 1969)

Kailasa Prasthana Sthala

How does the Kailasa Prasthana Sthala of Pujyashri Shankara Bhagavatpadacharya at Kedarnath differ from His Samadhi Sthala in Kanchipuram?

Kedardham is only the Kailasa-prasthana-Sthala of Pujyashri Shankara Bhagavatpadacharya. There is no mention of leaving His mortal coil behind and its burial at that place in the biographies of the Great Acharya. Kedarnath is not the Samadhi-sthala of Pujyasri Sankaracharya. (Dr.V.Kutumba Sastry, Former Vice Chancellor, Central Sanskrit University – D.D Special Broadcast, 2021)

பகவத்பாதாப்யுதயம் : நூல் அறிமுகம்

ஸ்ரீசங்கர சரிதம், அவரது திக்விஜயம் பற்றி விவரிக்கும் பல்வேறு பழம் நூல்களின் தொகுப்பான “பகவத்பாதாப்யுதயம் என்னும் சிறந்த நூலை, பிரஸித்த கவியும், பண்டிதருமாக விளங்கிய மஹாமஹோபாத்யாய லக்ஷ்மணஸூரி அவர்கள் இயற்றினார். இவர் துங்கா ச்ருங்கேரி ஆசார்யரான ஸ்ரீந்ருஸிம்ஹ பாரதீ ஸ்வாமிகளின் ப்ரிய சிஷ்யர் ஆவர்.

இந்நூல் 1927ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கம் வாணீ விலாஸ அச்சகத்தில் அச்சிடப் பெற்றது.

திவான்பகதூர் கே. எஸ். ராமஸ்வாமி சாஸ்திரியார் இதற்கு முகவுரை எழுதியுள்ளார். “மனித உலகத்திலேயே சிறந்தவர் ஸ்ரீசங்கர பகவத்பாதர். அதற்கேற்ப இக்காலத்தில் கவிகளில் சிறந்தவர் ஸ்ரீ லக்ஷ்மணஸூரி அவர்கள். இவர் இந்தக் காவியத்தை எழுதியது மிகவும் பொருத்தமானது” என்று நூலின் முகவுரையில் ஸ்ரீ ராமஸ்வாமி சாஸ்திரிகள் சொல்கிறார்.

ஸ்ரீ லக்ஷ்மணஸூரி அவர்கள் பல உயர்ந்த காவியங்களை எழுதிப் பெயர் பெற்ற கவியாகத் தென்னகத்தில் விளங்கினார். இவருடைய சிறந்த இலக்கிய ஸேவையை மெச்சி ஆங்கிலேய அரசு மிக உன்னதமான ‘மஹாமஹோபாத்யாயர்’ என்ற பிருதத்தை இவருக்கு வழங்கியது.

எளிய நடையில் அழகான ஸம்ஸ்கிருதச் சொற்களைக் கொண்டு இக் காவியத்தை ஸ்ரீலக்ஷ்மணஸூரி இயற்றி உள்ளார். இதில் உள்ள விசேஷம் யாதெனில், கவி தமது அபிப்பிராயமாகவே காவியத்தை எழுதாமல், மிகப் பழமையான சங்கர விஜயங்களை எல்லாம் பார்த்து ஆராய்ந்து, தாம் சொல்லும் விஷயங்களுக்கு அந்தப் பழைய நூல்களின் ஆதாரங்களையும் காண்பித்திருக்கிறார் என்பதே.

பல உயர்ந்த சங்கரவிஜய கிரந்தங்களைப் பார்த்து ஆராய்ந்து, ‘இவற்றுள் ஆனந்தகிரீய சங்கர விஜயம் மட்டுமே முக்கியப் பிரமாணக் கிரந்தம்’ என்பதைத் தீர்மானித்தால்தான், அதிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டியுள்ளார் துங்கா ச்ருங்கேரி ஆசார்யரின் ப்ரிய சிஷ்யரான இக்கவி.

காஞ்சியில் ஸ்ரீஆசார்யாள் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டையும் ஸ்ரீமட ஸ்தாபனமும் செய்ததையும் இந்நூலில் ஐயத்துக்கு இடமின்றித் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீசங்கர சரித்திரத்தை ஆராய்கிறவர்கள் ஸ்ரீ லக்ஷ்மணஸூரி அவர்கள் இயற்றிய இந்தக் காவியத்தை வாசித்துத் தெளிவடையலாம்

ஸ்ரீலக்ஷ்மணஸூரி அவர்களுடைய புத்திரரே துங்கா ச்ருங்கேரி மடத்தின் சிறந்த பக்தராகிய முன்னாள சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஸ்ரீ T.L.வெங்கட்ராம ஐயர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

A Short History of the Shivaganga matha…1

The Shivaganga Mutt’s brief history by B. Suryanarain Row is a rich compilation of the ancient history of Shivaganga kshrtra, Shri Adishankaracharya, the matha’s foundation & the lineage of Jagadguru Acharyas and traditional honours shown to this Sankarite institution by the Mysore Principality.

This 1914 publication not only explores the historical facets but also highlights the various privileges and special status enjoyed by the Shivaganga matha over the ages akin to the Sringeri matha founded by Sri Adishankara Bhagavatpada on the bank of Tungabhadra. The Mysore Government’s recognition, backed by precise legal and historical evidence, is meticulously examined by the author. This unique work dispels the misconception of considering the Shivaganga matha as a mere branch or shakha of the Tunga matha, providing clarity on its distinct identity and significance.

ஸ்ரீசங்கர விஜயம்

ஸ்ரீகோவிலூர் மடாதிபதி அவர்களது பொருளுதவியைக்கொண்டு1918ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீசங்கர விஜயத்தில் காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் மடங்கள் ஸ்தாபித்தமை பற்றிய குறிப்பு :-

“ஸ்ரீ கந்தபுராணம் சிவரஹஸிய கண்டம் நவாம்சம் பதினாறாவது அத்யாயத்துள்ளும் சிவபுராணத்துள்ளும் தேவர்களாற் கூறப்பட்டிருக்கிற ஸ்ரீமத் சங்கராசார்ய ஸ்வாமி சரித்திரம், வியாஸர் முதலிய முனிவர்களாலும், ஸ்வாமிகளது காலத்திலிருந்து அவர்களோடு உண்டு, உடுத்து உலகியல், ஆன்மவியல் இரண்டிலும் அவர்களுடன் அனுபவத்திலிருந்து வந்த எம் ஆசிரிய பரம்பரைகளாலும் எழுதப் பெற்றிருந்த நூல்களின் ஆதாரங்கொண்டும், சித்விலாஸ ஸ்வாமி, விஞ்ஞான ஸ்வாமியாகிய ஸந்யாஸிகள் எழுதிவைத்துள்ள சங்கர விஜய விலாசம் என்னும் நூலின் துணைகொண்டும், வியாஸாசலீய மஹாகாவியத்தின் உதவிபெற்றும், பத்மபாதர் எழுதிய சரித்திரத்தின் உத்தமோபசாரங் கொண்டும் இச்சரித்திரம் எழுதப் பெற்றிருக்கிறது.

பிறகு ஸ்வாமி திக்விஜயம் செய்யப் புறப்பட்டுக் காஞ்சீபுரத்தில் ஒரு மடமும் ஐகன்னாதத்தில் ஒரு மடமும் துவாரகையில் ஒரு மடமும் பதரிகாச்ரமத்தில் ஒரு மடமும் ஸ்தாபித்தார்கள்.”

சமிவன க்ஷேத்திரமென்னும்

செட்டிநாட்டுக் கோவிலூர் மடம் அத்துவித மரபினது; இம்மடம் துங்கா ச்ருங்கேரி மடத்துடன் நீண்ட காலத் தொடர்பு உடையது மைசூரார் சொல்வர். இம்மடத்தின் அதிபராக விளங்கிய தவமுனிவரின் பொருளுதவியைக் கொண்டு சிவரஹஸ்யம், சித்விலாஸீயம், வ்யாஸாசலீயம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஸ்ரீ சங்கரபகவத் பாதாசார்ய ஸ்வாமிகள் சரித்திரம் என்னும் இந்நூல் வெளிவந்துள்ளது.

காரைக்குடி கம்பராமாயண ப்ரசாரகர் மோ.வெ. கோவிந்தராஜ ஐயங்கார் எழுதிய இந்த சரித்திர நூல் 1918ஆம் ஆண்டு இலவச வெளியீடாக வழங்கப்பட்டது.

भगवत्पाद श्रीआद्यशङ्कराचार्य का काल-निर्धारण एवं दीक्षास्थान

भगवत्पाद श्रीआद्यशङ्कराचार्य का काल-निर्धारण एवं दीक्षास्थान – महामहोपाध्याय प्रो. जयप्रकाशनारायण द्विवेदी (विद्यावाचस्पति)

शङ्कराचार्य-सन्देश ( अप्रैल – जून २०१८)

அணிந்துரை-குடந்தையுள் காஞ்சி நூல்

” ஸ்ரீஆதிசங்கரர் தமக்கெனக் காஞ்சியில் நிறுவிய “ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்” மிகத் தொன்மையாதாதலை 1916-இல் டி.ஏ.கோபிநாதராவ் பதிப்பித்த செப்பேடுகள் நிறுவும்…அம்பிகாபுரம் செப்பேடு ஸ்ரீமடத்தின் தொன்மையான செப்பேடாகும்.

இவ்வளவு தொன்மையான சான்றாதாரங்களை உடைய காஞ்சி மடமே குடந்தையுள் உறைந்தது என்பதையும் அவர்கள் ஆற்றிய சமய, சமுதாயப் பணிகளையும் சரஸ்வதி மகாலில் உள்ள மோடி என்னும் எழுத்து வகையால் எழுதப்பெற்ற பல நூறு மராட்டிய ஆவணங்கள் நிறுவுகின்றன…”

– T.Satyamurthy,

Superintending Archaeologist,

Archaeological Survey of India

(Ministry of H.R.D., Deptt. of Culture)

Thrissur Circle, Thoppinmoola Aranattukara,

Thrissur – 680 618.

Date: 26.11.98

(அணிந்துரை-குடந்தையுள் காஞ்சி நூல்- வித்வான் புலவர்.வே.ம அவர்கள்)

Virupaksha Sringeri Sankaracharya’s tour

This 1936, news publication brings attention to the diverse history of mathas across South India challenging the notion that Tunga matha was the only principal institution for the South.

A careful examination of historical records of these ancient mathas reveals the varied history of Shankarite institutions, emphasizing the need to avoid portraying others as mere branches of Tunga matha and promoting unity within the Shankara Sampradaya.

குடந்தையுள் காஞ்சி – அணிந்துரை

“..காலங்காலமாக எழுதப்பட்டு வரும் வரலாற்றில், காலத்தின் கண்ணாடியாக விளங்கும் வரலாற்றில், சில வேளைகளில் சிலரின் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப பொய்மையும் மெய்ம்மைப் புனைவு கொண்டு வந்து விடுவது உண்டு. வரலாற்று ஆய்வாளர்கள் கள ஆய்வு (Field Research) செய்து பொய்மைகளைப் புறம் தள்ளி மெய்ம்மை மேலோங்கச் செய்ய வேண்டும்…

இந்தியத் திருநாட்டில் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கேற்ப அயலார் ஆட்சியும், அந்நியர் ஆதிக்கமும் ஏற்பட்டு நம் தொன்மைச் சமயங்களுக்கும், சமய மடங்களுக்கும் தொல்லைகள் ஏற்படத் தொடங்கின. மண்ணையும் மாண்புறு தத்துவங்களையும், மக்கள் சமுதாயத்தையும் காக்க வேண்டி நம் சமயத் தலைவர்கள் மடங்களின் இருப்பிடங்களை, வழிபாட்டிடங்களைத் தற்காலிகமாக மாற்றிச் சமயத்தையும், மடத்தையும் காத்து வந்துள்ளனர். இவ்வாறு தெய்வத் திருமேனிகளையும், தெய்வப் பனுவல்களையும் அந்நியர்களிடமிருந்து காத்து வைக்க நம் முன்னோர்கள் அரும்பாடுபட்ட உண்மை நிகழ்ச்சிகளை வரலாறு நன்கறியும். இந்நெறியில் காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகளின் ஸ்ரீ மடத்துக்குரிய ஒரு மடம் குடந்தையில் உள்ளது. சமுதாயச் சூழல் காரணமாக காஞ்சி ஸ்ரீ சங்கராசார்ய மரபினர் சற்றேறக் குறைய 200 ஆண்டுகள் குடந்தையில் இருந்து சமயப்பணிகளும், சமுதாயப் பணிகளும் ஆற்றியுள்ளனர்…

அருளியல் நோக்கில் ஆதிசங்கரரால் அமைக்கப்பட்ட மடங்களுள் ஒரு சில பிற்காலத்தில் எண்ண மாற்றத்தின் காரணமாய் முதன்மை ஸ்ரீமடமான காஞ்சி மடத்தின் தொன்மைச் சிறப்பை அறியாமல் மனமாறுபாடு கொண்டனர்…

ஆதிசங்கர பகவத் பாதர் தம் இந்தியச் சுற்றுப் பயணங்களில் தேவைப்பட்ட இடங்களில் எல்லாம் மடங்களை நிறுவித் தம் பணியினைத் தொடரத் தம் சீடர்களை நியமித்துள்ளார். இவ்வாறு ஸ்ரீ சங்கரரால் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் மடங்கள் நிறுவப்பட்டன…”

– பேரா. டாக்டர். நாகப்பா நாச்சியப்பன் அவர்களின் அணிந்துரையிலிருந்து – புலவர்.வித்வான்.வே.ம.அவர்களின் குடந்தையுள் காஞ்சி, வரலாற்றாய்வு நூல்.