கும்பகோணத்துடன் ஸ்ரீபகவத்பாத சங்கரரின் தொடர்பு : ஒரு ஆய்வு (முதற் பகுதி)

கும்பகோணத்துடன் ஸ்ரீபகவத்பாத சங்கரரின் தொடர்பு : ஒரு ஆய்வு (முதற் பகுதி)

ஸ்ரீபகவத்பாத சங்கராசார்யரின் தகப்பனார் ஸ்ரீசிவகுரு ஆவர். ஸ்ரீசிவகுரு தன் மனைவியுடன் திருச்சிவப்பேரூரில் (தற்காலம் திருச்சூர்) மகப்பேறு வேண்டித் தவம் இருந்தார். அவருடைய ஊர் காலடி என்பதாகும்.

திருச்சிவபுரம்

கும்பகோணத்திற்கு சுமார் மூன்று மைல் தென்கிழக்கில், ‘திருச்சிவபுரம்’ என்ற சிவத்தலம் உள்ளது. இது ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் முதலியோரால் போற்றப் பட்டது. இது மிகப் புராதனக்கோயில். இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு “ஸ்ரீசிவகுருநாதர்” எனப்பெயர். ‘சிவகுருநாதன்’ என்றும் ‘சிவகுரு’ என்றும் பெயர் பூண்ட சைவர்கள் பலர் இன்றும் கும்பகோணத்திலும், அதன் சுற்றுப்பகுதியிலும் உளர்.

கேரளத்தில் தமிழர் குடியேற்றம்

ஸ்ரீபரசுராமர் தென்னாட்டை அடைந்து, கேரளத்தில் தமிழர் பலரைக் குடியேற்றுவித்தார் எனச் சொல்லப்படுகிறது. பிற்பாடு கி.மு. 6-ஆம் நூற்றாண்டின் முன்னரே கேரளத்திற்கு தமிழர்கள் பெருமளவில் சென்று குடியேறினர் என ஊகித்தறியப்பாலது.

இன்னும் சிவபுரத்தைச் சுற்றியும், காலடியையும், திருச்சிவப்பேரூரையும் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாத்தூர், சேதினீபுரம், சந்திரசேகரபுரம், *கருக்குடி, கண்டியூர் என ஒரேவிதமான பெயர்களைக் கொண்ட பல ஊர்கள் உள்ளன.

(*கும்பகோணத்தை அடுத்த மருதாநல்லூருக்கு கருக்குடி என்னும் பழம் பெயர் உண்டு. கேரளத்தில் இருக்கும் கருக்குடி, காலடிக்கு சமீபமாக உள்ள அங்கமாலிக்கு அடுத்த கருக்குட்டி என்ற ரயில் நிலையம் ஆகும்.)

(1/3)