ஸ்ரீசங்கர விஜயம் – 2

பேராசிரியர்

ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி.,

(ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)

இளமை

மூன்றாம் வயசு முழுதும் நிரம்புமுன் சான்றோன் சங்கரன் பாஷைபல பகர்ந்தான்;

ஐந்தே ஆண்டுகள் கடக்கும் முன்னமே மைந்தனும் கற்றான் சாத்திர மனைத்துமே ;

இந்த நிலையில் தந்தை சிவகுரு

மைந்தனை விட்டு மண்ணுலகு நீத்தார்;

தனித்து நின்ற தாய்ஆர் யாம்பிகை

தனயன் தனக்குத் தந்தையு மானாள் ;

உரிய காலத்தில் உறவினர் உதவியால்

உபநயனம் செய்வித் துள்ளம் மகிழ்ந்தாள் ;

வேதாப் பியாசம் விதிப்படி செய்யவும் வேண்டிய பலப்பல வசதிகள் செய்தாள்;

மாதாவே தெய்வமென மதித்தார் சங்கரர்;

வேதாக மங்கள் ஒதுவது மானார் ;

அன்னையிடம் சங்கரர்க் களவற்ற அன்பு;

அன்பினால் அவர்செய்த அற்புத மனந்தம் ;

நோய்வாய்ப் பட்ட தாயவள் நதிக்குப்

போய்வர இயலாப் பொழுதினி லங்கே

ஆற்றைத்தம் இல்லத்தின் அருகே வாவென

ஆஞ்ஞா பித்தார் அன்னைக்கு உதவ; செல்வனின் ஆணைக்குச் செவிசாய்த் தந்நதி

தெள்ளென ஓடியது வீட்டுவா சலிலே. (2/20)