ஸ்ரீமுக முத்ரை மற்றும் பிருதாவளி

ச்ருங்கேரி என்ற பெயரொட்டுடன் திகழும் பல்வேறு மடங்களின் ஸ்ரீமுக முத்ரை மற்றும் பிருதாவளி பற்றிய ஆய்வுக் குறிப்புகள் (தொகுப்பு …1)

ஆந்திரம்-கர்நாடகம்-மஹாராஷ்ட்ரம் ஆகிய மூன்று பிரதேசங்களிலும் “ச்ருங்கேரி” என்ற பெயரொட்டுடன் புகழுடன் விளங்கும் மடங்கள் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

இந்த மடாதிபர்களின் ஸ்ரீமுக முத்ரை மற்றும் பிருதாவளி ஆகியன அனைத்தும் ஒரேமாதிரியான பெயர் மற்றும் சொற்களுடன் இருப்பது இந்த மடங்கள் யாவும் சமமான அந்தஸ்துடன் முற்காலந்தொட்டு போற்றப்பட்டு வந்துள்ளமைக்குச் சான்று பகர்கின்றன.

இத்தொகுதியில் தரப்படும் ஸ்ரீமுக முத்ரை, பிருதாவளி மற்றும் ஆய்வுக் குறிப்புகள் ஆகியனவற்றால் இந்த மடங்கள் தோன்றிய காலம், மரபு, வளர்ச்சி மற்றும் இவற்றிற்கு அந்தந்த பிரதேச மன்னர்கள் அளித்துள்ள சமமான அந்தஸ்து ஆகியன எளிதின் விளங்கும்.

மேலும் ஸ்ரீமுக பிருதாவளிகளில் ஒரே வகையினவாகக் காணப்படும் இவ்வணிகள் யாவும், தமது இருப்பிடத்தின் பெயரை முன்மையாகவும், ச்ருங்கேரி என்ற இணைப்பையும் ஏற்றுவந்துள்ள எந்த ஒரு குறிப்பிட்ட மடத்துக்கும் மட்டுமே சொந்தமானவை என்று சொல்வோரின் அறியாமையை நமக்குத் தெற்றெனப் புலனாக்கும்.

இத்தொகுப்பில் முதலாவதாக ஸ்ரீபுஷ்பகிரி ச்ருங்கேரி மடாதிபர்களின் ஸ்ரீமுக முத்ரை பிருதாவளி இங்கு தரப்பட்டுள்ளது.

“ஸ்ரீ வித்யா சங்கர”

(அ) சதுர வடிவிலான முத்ரையிலுள்ள சொற்கள் :-

“ஸ்ரீச்ருங்ககிரி ஸ்ரீவிரூபாக்ஷ – ஸ்ரீபுஷ்பகிரி ஸ்ரீஆலம்புரி – ஸ்ரீவித்யாசங்கர கரகமல-ஸஞ்ஜாத. “

(ஆ) ஸ்ரீமுக பிருதுகளில் சிலவற்றின் பொருள் :-

“வ்யாக்யான ஸிம்ஹாஸனத்தின் அதிபரும், கர்னாடக ஸிம்ஹாஸனத்தை நிறுவிய, துங்கபத்ராதீரவாஸியான, ச்ருங்ககிரி, விரூபாக்ஷ, புஷ்பகிரி, ஸ்ரீசைல, ஆலம்புரி முதலிய அனைத்து பீடங்களின் அதிபதியான ….”

ஸ்ரீசங்கரபகவத்பாதர்களும் ஹிந்துமத ஒற்றுமையும்.. 2

ஒரே ஸத்வஸ்து பல பேதங்களையும் பெயர்களையும் அடைய வேண்டுமென்றால் அது எப்படி முடியும் ? என்பதையும் ஸ்ரீபகவத்பாதர் விளக்குகிறார். ஒரே ப்ரஹ்மம் நிர்குணம் ஸகுணம் என்று இரண்டாக உள்ளதனால், உலக ஸம்பந்தம் வரையில் ஸகுணமாகும் ; தனி ஸ்வரூபத்தில் நிர்குணமாகும் என்பதை, பாஷ்யம் முதலான கிரந்தங்களில் நிலைநாட்டியுள்ளார். இவ்வாறே ஸாங்க்ய நையாயிக தர்சனங்களை அலசிப் பார்த்தால் இவை எல்லாவற்றையும் உள்ளடக்கித் தனியாகப் பிரகாசிப்பது அத்வைதம்தான் என்பதையும் கிரந்தங்களின் வாயிலாகப் பல பிரபல பிரமாண யுக்திகளுடன் நிலைநாட்டியுள்ளார். இவ்வாறான பெருமுயற்சிகள் எல்லாமே ஹிந்துமத ஒற்றுமையை ஸ்தாபிப்பதற்குத்தான் என்பதில் ஐயமில்லை.”ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காகவும் எல்லா வழிகளிலும் ஒன்றைப் பார்ப்பதற்காகவுமே வாழ்க்கையை அர்ப்பித்தவன் என்று ஸ்ரீசங்கர பகவத்பாதர் தம்மைத் தைத்திரீய உபநிஷத் பாஷ்யத்தில் கூறிக் கொள்ளுகிறார். ” यन्मां एकयोगिनं अनेकयोगिप्रतिपक्षिणमात्थ । ஒற்றுமையை நாடும் என்னை வேற்றுமையில் ஈடுபடும் பலரின் எதிரியாக இருப்பதாகக் கூறுகிறீர்கள் ” என்கிறார்.ஸ்ரீசங்கரபகவத்பாதர் காட்டிய இந்த மனப்பான்மையை, இக் காலத்தில் உள்ள எல்லா மதத்தினரும் பின்பற்ற வேண்டும். அவருடைய மற்ற கொள்கைகளை ஒப்புக்கொள்ளாதவர்களுங்கூட இந்த ஒற்றுமை மனப்பான்மையைப் பின்பற்ற வேண்டுகிறோம்.(நன்றி: ஸ்ரீகாமகோடி ப்ரதீபம், 1969 )

ஸ்ரீசங்கரபகவத்பாதர்களும் ஹிந்துமத ஒற்றுமையும் .. 1

பாரத தேச மக்களிடம் கருணை காரணமாகவே தெய்வம் அவ்வப்போது சில பெரியோர்களை நம் நாட்டில் அவதரிக்கச் செய்து வருகிறது. அந்த மகான்கள் ஹிந்து மத ஒற்றுமைக்காகத் தம் வாழ்க்கையையே அர்ப்பித்திருக்கிறார்கள். இவ்வாறு அவதரித்த மஹான்களில் மிகச் சிறந்தவர் ஸ்ரீசங்கர பகவத்பாதர் எனக் கூறின் மிகையாகாது.

வேதத்தின் அடிப்படைப் பிரமாணத்தை முதலில் அவர் ஸ்தாபிக்க முயன்று வெற்றியும் கண்டார். வேதங்களின் பொருளை ஆராய்ந்த பெரியோர்களிடத்தில் கண்ட வேற்றுமைகளிலும் ஸ்ரீபகவத்பாதர் ஒற்றுமையைக் கண்டு, இதை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பெருமுயற்சி செய்தார்.ஹிந்து மதத்தைப் பின்பற்றுபவர்களின் வழிபாட்டு முறைகளை ஆராய்ந்து, இதில் ஆறு வழிகள் முக்கியமாக இருப்பதைக் கண்டு, இந்த ஆறு வழிபாடுகளிலும், ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பெயர் கொண்ட தெய்வம் காணினும் எல்லாமாக முடிவில் ஒரே தெய்வம்தான் என்ற உண்மையை அவர் மக்களிடையே பரப்பலானார்.

பல வழிபாடுகளை ஆறு வழிபாடுகளாக ஆக்கி, அவையும் ஒரே கடவுள் தத்துவத்தைத்தான் நோக்காகக் கொண்டுள்ளன என்ற பேருண்மையை ஸ்ரீசங்கரபகவத்பாதர் கண்டதனாலும், அநேக மதங்களில் இருந்த அவைதிகமான ஆசாரங்களை நீக்கி, நடைமுறையில் இந்த ஆறு மதங்களைக் கைக்கொள்ளச் செய்ததனாலும் அவருக்கு ‘ஷண்மத ஸ்தாபனாசார்யர் என்ற பிரசித்தி அவர் காலம் தொடங்கியே ஏற்பட்டது.

ஷண்மத ஸ்தாபனார்சார்யர் என்ற பெயர் அவருக்கு உள்ளதனால், அவர் ஆறு மதங்களைப் புதிதாக ஸ்தாபித்தார் என்று கொள்ளலாகாது. அவ்வாறு அவரோ அவரைப் பின்பற்றுகிறவர்களோ சொல்லவும் இல்லை. ஸ்ரீசங்கரபகவத்பாதர் தமது காலத்தில் எழுபத்திரண்டு மதங்களாகப் பிரிந்து இருந்தவற்றை ஆராய்ந்து, அவற்றில் பலவற்றைத் தள்ளியும், கடைசியாக அடிப்படையாகச் சைவம், வைஷ்ணவம், காணபத்யம், சாக்தம், கௌமாரம், ஸௌரம் என்ற ஆறே முக்கிய மானவை என்று தீர்மானித்தும் இவற்றைப் பரப்பலானார்.

இந்த ஆறு மத வழிபாட்டின் பெருமைகளை ஸ்ரீபகவத்பாதர் தம்முடைய கிரந்தங்களினால் நன்றாகத் தெளிவுபடுத்தி இருக்கிறார். ஆனால், பல இடங் களில் – குறிப்பாக ‘ஹரிமீடே’ ஸ்தோத்ரம் போன்றவற்றில்- “ஒரே ஸத்தான பொருளுக்குத்தான் சிவன், விஷ்ணு, சக்தி, கணபதி, ஆதித்யன், குமாரன் என்றெல்லாம் பெயர்” என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.

(நன்றி: ஸ்ரீகாமகோடி ப்ரதீபம், 1969)

Kailasa Prasthana Sthala

How does the Kailasa Prasthana Sthala of Pujyashri Shankara Bhagavatpadacharya at Kedarnath differ from His Samadhi Sthala in Kanchipuram?

Kedardham is only the Kailasa-prasthana-Sthala of Pujyashri Shankara Bhagavatpadacharya. There is no mention of leaving His mortal coil behind and its burial at that place in the biographies of the Great Acharya. Kedarnath is not the Samadhi-sthala of Pujyasri Sankaracharya. (Dr.V.Kutumba Sastry, Former Vice Chancellor, Central Sanskrit University – D.D Special Broadcast, 2021)

பகவத்பாதாப்யுதயம் : நூல் அறிமுகம்

ஸ்ரீசங்கர சரிதம், அவரது திக்விஜயம் பற்றி விவரிக்கும் பல்வேறு பழம் நூல்களின் தொகுப்பான “பகவத்பாதாப்யுதயம் என்னும் சிறந்த நூலை, பிரஸித்த கவியும், பண்டிதருமாக விளங்கிய மஹாமஹோபாத்யாய லக்ஷ்மணஸூரி அவர்கள் இயற்றினார். இவர் துங்கா ச்ருங்கேரி ஆசார்யரான ஸ்ரீந்ருஸிம்ஹ பாரதீ ஸ்வாமிகளின் ப்ரிய சிஷ்யர் ஆவர்.

இந்நூல் 1927ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கம் வாணீ விலாஸ அச்சகத்தில் அச்சிடப் பெற்றது.

திவான்பகதூர் கே. எஸ். ராமஸ்வாமி சாஸ்திரியார் இதற்கு முகவுரை எழுதியுள்ளார். “மனித உலகத்திலேயே சிறந்தவர் ஸ்ரீசங்கர பகவத்பாதர். அதற்கேற்ப இக்காலத்தில் கவிகளில் சிறந்தவர் ஸ்ரீ லக்ஷ்மணஸூரி அவர்கள். இவர் இந்தக் காவியத்தை எழுதியது மிகவும் பொருத்தமானது” என்று நூலின் முகவுரையில் ஸ்ரீ ராமஸ்வாமி சாஸ்திரிகள் சொல்கிறார்.

ஸ்ரீ லக்ஷ்மணஸூரி அவர்கள் பல உயர்ந்த காவியங்களை எழுதிப் பெயர் பெற்ற கவியாகத் தென்னகத்தில் விளங்கினார். இவருடைய சிறந்த இலக்கிய ஸேவையை மெச்சி ஆங்கிலேய அரசு மிக உன்னதமான ‘மஹாமஹோபாத்யாயர்’ என்ற பிருதத்தை இவருக்கு வழங்கியது.

எளிய நடையில் அழகான ஸம்ஸ்கிருதச் சொற்களைக் கொண்டு இக் காவியத்தை ஸ்ரீலக்ஷ்மணஸூரி இயற்றி உள்ளார். இதில் உள்ள விசேஷம் யாதெனில், கவி தமது அபிப்பிராயமாகவே காவியத்தை எழுதாமல், மிகப் பழமையான சங்கர விஜயங்களை எல்லாம் பார்த்து ஆராய்ந்து, தாம் சொல்லும் விஷயங்களுக்கு அந்தப் பழைய நூல்களின் ஆதாரங்களையும் காண்பித்திருக்கிறார் என்பதே.

பல உயர்ந்த சங்கரவிஜய கிரந்தங்களைப் பார்த்து ஆராய்ந்து, ‘இவற்றுள் ஆனந்தகிரீய சங்கர விஜயம் மட்டுமே முக்கியப் பிரமாணக் கிரந்தம்’ என்பதைத் தீர்மானித்தால்தான், அதிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டியுள்ளார் துங்கா ச்ருங்கேரி ஆசார்யரின் ப்ரிய சிஷ்யரான இக்கவி.

காஞ்சியில் ஸ்ரீஆசார்யாள் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டையும் ஸ்ரீமட ஸ்தாபனமும் செய்ததையும் இந்நூலில் ஐயத்துக்கு இடமின்றித் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீசங்கர சரித்திரத்தை ஆராய்கிறவர்கள் ஸ்ரீ லக்ஷ்மணஸூரி அவர்கள் இயற்றிய இந்தக் காவியத்தை வாசித்துத் தெளிவடையலாம்

ஸ்ரீலக்ஷ்மணஸூரி அவர்களுடைய புத்திரரே துங்கா ச்ருங்கேரி மடத்தின் சிறந்த பக்தராகிய முன்னாள சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஸ்ரீ T.L.வெங்கட்ராம ஐயர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

A Short History of the Shivaganga matha…1

The Shivaganga Mutt’s brief history by B. Suryanarain Row is a rich compilation of the ancient history of Shivaganga kshrtra, Shri Adishankaracharya, the matha’s foundation & the lineage of Jagadguru Acharyas and traditional honours shown to this Sankarite institution by the Mysore Principality.

This 1914 publication not only explores the historical facets but also highlights the various privileges and special status enjoyed by the Shivaganga matha over the ages akin to the Sringeri matha founded by Sri Adishankara Bhagavatpada on the bank of Tungabhadra. The Mysore Government’s recognition, backed by precise legal and historical evidence, is meticulously examined by the author. This unique work dispels the misconception of considering the Shivaganga matha as a mere branch or shakha of the Tunga matha, providing clarity on its distinct identity and significance.