ஜகத்குரு ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களின் விச்வரூப யாத்திரை தினச் சிந்தனை

ஸ்ரீசங்கராசார்யர் நான்கு திருக்கரங்களை உடைய ஸ்ரீமஹாவிஷ்ணுவைப் போல தமது நான்கு சிஷ்யர்களுடன் திகழ்ந்து தமக்கும், தமது சிஷ்யர்கள் நால்வருக்குமாக ஐந்து திருமடங்களை அமைத்தனர் என்று துங்கா ச்ருங்கேரி குருவம்ச காவ்யத்தில் உள்ளமை கீழ்க்கண்டவாறு :-

वाराणसीं योगिवरोऽधिगम्य भुजैरिव श्रीहरिरेष शिष्यैः ।

सहात्मना पञ्चमठानमीषां प्रकल्प्य तस्थौ कतिचिद्दिनानि ॥२३॥

– गुरुवंशकाव्ये तृतीयः सर्गः

வாராணஸீம் யோகிவரோதிகம்ய

புஜைரிவ ஸ்ரீஹரி ரேஷசிஷ்யை : ।

ஸஹாத்மனா பஞ்ச மடான மீஷாம் ப்ரகல்ப்ய தஸ்த்தெள கதிசித் திநானி।।

– குருவம்சகாவ்யம், 3ஆம் ஸர்க்கம், 23.