காலடியின் உண்மை வரலாறு…6

2532ஆவது ஸ்ரீசங்கர ஜயந்தி விசேஷ வெளியீடு – காலடியின் உண்மை வரலாறு…6 (1910 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து)

ஆதியில் இக்காலடி க்ஷேத்திரம் ஓர் அநாதி ஸ்வயம்புலிங்க க்ஷேத்ரமாய் ஏற்பட்டிருந்ததென்றும், ராஜசேகரன் என்னும் ஓர் அரசனால் சூர்ணீ நதிக்கரையில் ஒரு பக்கத்தில் விருஷாத்ரிநாதருடைய ஆலயத்துடனும் மற்றொரு பக்கத்தில் ஸ்ரீகிருஷ்ண ஸ்வாமி ஆலயத்துடனும் ஒரு பெரிய பிராஹ்மணாக்ரஹாரமாக அமைக்கப்பட்டிருந்தது என்றும், அதனுள் வேத வேதாங்க பாரங்கதர்களான அநேகம் பிராஹ்மணோத்தமர்கள் நமது ஆசார்ய ஸ்வாமிகளின் காலத்தில் வஸித்து வந்தார்களென்றும் நாம் புஸ்தகங்களில் படித்திருக்கின்றோமே அன்றி அத்தகைய பிராஹ்மணாக்ரஹாரம் இக்காலத்தில் ஒன்றும் காணப் படவில்லை,

சுமார் பதினைந்து வருஷங்களுக்கு முன் (1895) இக்காலடி என்னும் ஊரைக் கவனித்தவருங்கூட இல்லை. முன் பிரபல அக்ரஹாரமாயிருந்த இடம் சில மாதங்களுக்கு முன்வரையில் பெருங்காடாயிருந்ததாகத் தெரியவருகின்றது.

ஏதோ தெய்வாநுகூலத்தினால் ஸ்ரீமதாசார்யஸ்வாமிகள் பால்யத்தில் திருவிளையாடல்கள் ஆடின கிருஹமும், பின்பு தமது தாயாராகிய ஆர்யாம்பாளைச் அவர் தஹனம் செய்த ஸ்தலமுமாகிய ஓர் இடம் மாத்திரம் தொன்றுதொட்டு பரம்பரையாய்க் குறிப்பிக்கப்பட்டு வந்தது.

அந்த இடத்தையும்கூட, ஊரை ஆக்கிரமித்துக் கொண்டதுபோல, அந்நிய மதஸ்தர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கியதை கேள்வியுற்று என்ன செய்வோமென்று சில ஆரிய மதாபிமானிகள் துயரமுற்றிருக்குங்கால் ஜகதீசன் அம்சம்போல் அவதரித்திருந்த பிரஹ்ம வித்யா பத்திராதிபராய் பலகாலம் விளங்கி வந்த எமது ஆசிரியர் பிரஹ்மஸ்ரீ பரசமய பஞ்சானன பாஞ்சஜன்ய பண்டித ( நடுக்காவேரி) ஸ்ரீநிவாஸ சாஸ்திரிகள் சில கனவான்களுடன் இக்காலடி க்ஷேத்திரத்திற்குச் சென்று, ஸ்ரீமத் ஆதி சங்கராசார்ய ஸ்வாமிகளுடைய கிருஹமும் ஸ்ரீமதார்யாம்பாளுடைய தஹன ஸ்தலமுமாகிய அந்த இடத்தை மாத்திரம் வெகு பிரயாசைப்பட்டு, அந்நிய மதஸ்தர்களின் கையினின்றும் மீட்டு, அவ்விடத்தில் ஒரு குடீரமும் ஏற்படுத்தி சென்ற விகாரி வருஷம் (1899-1900) முதல் ஆசார்ய ஸ்வாமிகளுடைய பிறந்த நாளாகிய வைசாக சுத்த பஞ்சமியில், வித்வஜ்ஜனங்களைக்கூட்டி, ஆசார்யருடைய சரித்திர விஷயமாயும், அவர்கள் ஸ்தாபித்த அத்துவைத மத விஷயமாயும், பற்பல உபந்நியாஸங்களைச் செய்து ஆசார்ய ஜயந்தி மஹோத்ஸவத்தை விமர்சையுடன் தாம் உயிருடனிருந்த அளவும் நடத்தி வந்தார்கள். (தொடரும்)

May be an image of temple and text

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *