காலடியின் உண்மை வரலாறு…5

2532ஆவது ஸ்ரீசங்கர ஜயந்தி விசேஷ வெளியீடு – காலடியின் உண்மை வரலாறு…5 (1910 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து)

மலையாள நாட்டில், பூர்ணாநதி என்றும், சூர்ணீநதி என்றும் வழங்கி வந்த ஆல்வாய் நதிக்கரையில் சசலகிராமமென்று வழங்கி வந்த காலடி க்ஷேத்திரத்தில் ஆத்ரேய கோத்திரத்தில் ஸ்ரீவித்யாதிராஜர் வம்சத்தில் மஹாபண்டிதராய் அவதரித்த ஸ்ரீசிவகுரு என்னும் பிராஹ்மணோத்தமருக்கு, அவர்களுடைய தர்மபத்னியாகிய ஸ்ரீமதார்யாம்பாளின் பவித்திரமான கர்பத்தில் வர்த்தமான கலியுகாப்தம் 2593-ம் வருஷத்துக்குச் சரியான கி.மு. 509-ம் வருஷம், நந்தன ஸம்வத்ஸரம், உத்தராயணம், வைசாக மாஸம், சுக்ல பக்ஷம், பஞ்சமி திதி, புநர்வஸூ நக்ஷத்திரம், தநூர் லக்னம் கூடிய இந்தச் சுபதினத்தில் ஸ்ரீமத் ஆதிசங்கராசாரிய ஸ்வாமிகள் அவதரித்தார் என்பது பிராசின சங்கர விஜயத்தாலும், பிருஹத் சங்கர விஜயத்தாலும், குருரத்ன மாலிகையாலும், புண்யச்லோக மஞ்சரியாலும், ஸுஷும்னையாலும், ஜினவிஜயத்தாலும், ராஜதரங்கிணியாலும், கதாஸரித்ஸாகரத்தினாலும், பதஞ்ஜலி விஜயத்தாலும், விமர்ச கிரந்தத்தினாலும், துவாரகாதி பீடங்களின் குரு பரம்பரைகளாலும், ஸ்ரீஸுதந்வ ஸார்வபௌம தாம்ரபத்ர சாஸனத்தினாலும், இன்னும் பற்பல பிரமாணங்களாலும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் யாவருக்கும் விளங்கும்.

ஆகவே இம்மஹாபுருஷருடைய பெயரையும், புகழையும் கொண்டாடுவதற்கு இவர்களது ஜன்ம பூமியாகிய காலடி க்ஷேத்திரத்தில் ஆலயமும், மடமும் அமைத்து அவர்களது பெருமைக்கேற்ற பிரதிஷ்டை ஒன்று செய்ய வேண்டுமென்று ஆரிய மதாபிமானிகளின் மனதில் வெகுநாளாக ஓர் எண்ணம் குடிகொண்டிருந்தது.

ஆனால் இக்காலடி என்னும் க்ஷேத்திரம் எங்கே இருக்கின்றது, எந்த ஸ்திதியில் இருக்கிறது என்பது கூட ( கேரள தேசவாசிகள் அல்லாதோர்) பலருக்கும் தெரியாமலிருந்தது. (தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *