This information is found in the Sri Kalyana Sevak Rathotsava Pushpa, 1974 (Pushpam 21 of Sri Kalyana Sevaka Granthamala) of Shri Shankeswara Matha.

This Marathi passage narrates in detail, the daily worship of Malayala Brahman, (the guardian deity of the Matha), under a peepul tree (asvattha tree) in the Advaita Matha at Shankeswar in the Karnataka region and also of a special festival of the deity on Rathasaptami day. But the story part of the passage speaks of Shri Adi Sankaracharya’s meeting a Brahmarakshas during the former’s wide travels and overcoming the Brahmarakshas (Malayala Brahman).

Malayala Brahman, as per the story, on admiring the superb attainments and characteristics of the Acharya, offers to serve him, whereupon He ordains Malayala Brahman to protect the institutions established by him and says that Malayala Brahman will be worshipped by the heads of those institutions.(Sri Vidyaranya, Published by The Vidyaranya Vidyapitha Trust, Hampi, 1983)

ஸ்ரீஶங்கேஶ்வரம் கரவீரம் மடத்தில் ஒவ்வொரு வருடமும் ரதஸப்தமி அன்று, ஸ்ரீசங்கர பகவத்பாதர்கள் அவர்களின் அருள் வரலாற்றுடன் தொடர்புடையதும், அந்த மடத்தின் காவல் தேவதையுமான மலையாள ப்ரஹ்மா என்னும் ப்ரஹ்மராக்ஷஸுக்குப் பூஜைகள் நடைபெறும்.

இதற்கென, ஹிரண்யகேசி நதிக்கரையில் உள்ள அந்த மடத்தின் தென்புறத்தில் இருக்கும் அஶ்வத்த வ்ருக்ஷத்தின் அடியில் சிவலிங்கத்தை ப்ரதிஷ்டித்து ருத்ராபிஷேகம் செய்து வழிபட்ட பிறகு இதற்கான பூஜைகள் தொடரும்.

ஸ்ரீகரவீர மடத்தின் பழைய வரலாற்றின்படி, ஸ்ரீசங்கரார்ய ஸ்வாமிகள் அவர்கள் மலையாள தேசத்தில் விஜயம் செய்து கொண்டிருந்தபோது, ​​அங்கு ஓரிடத்தில் ஒரு அஶ்வத்த மரத்தில் இருந்த ப்ரஹ்ம ராக்ஷஸ் அவரை வாதிட்டு வெல்ல முயன்றது. அதைத் தோற்கடித்த ஸ்ரீஆசார்யாளின் வாதத் திறன், மதிநுட்பம், புலமை, நேர்மை, தன்னலமற்ற தன்மை போன்ற குணங்களின் கோர்வையைக் கண்டு கொண்ட ப்ரஹ்மராக்ஷஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்து, ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் பாதங்களில் பணிவுடன் வணங்கி, ‘நான் தங்கள் சேவகன், அருள் கூர்ந்து தங்களுக்கு சேவை செய்ய எனக்கு உத்தரவு பிறப்பிக்கவும்’ என்று பணிவுடன் வேண்டியது.

ஸ்ரீஆசார்யாள் அவர்களும், தாம் நிறுவிய மடங்களை மலையாள ப்ரஹ்மா பாதுகாத்துவர வேண்டும் எனவும், அந்தந்த மடாதிபதிகளும் தமது மடத்தின் காவல் தெய்வமாக அவரை வணங்குவர், என்றும் அருளினார்.

ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமிகள் அவர்களின் ஆஜ்ஞைப்படி, மடத்தின் காவல் தெய்வமான மலையாள ப்ரஹ்மா வழிபாடு, மடத்தின் பாரம்பரியத்தின்படி தினமும் தொடர வேண்டும். அஶ்வத்த மரத்தினடியில் ருத்ராபிஷேகம் – பூஜை – நைவேத்யம் போன்றவை சிறப்படன் செய்யப்பட வேண்டும்.

1960ஆம் ஆண்டில் ஒரு சமயம் இம்மரம் விழுந்து விட்டதால், மரபு வழக்கப்படி அந்த இடத்தில் ஒரு புதிய அஶ்வத்த மரம் மீண்டும் நடப்பட்டு பூஜைகள் நடந்தேறின.

(ஸ்ரீ கல்யாண் க்ஷேத்ரக் ரதோத்ஸவ புஷ்பம் 1974)

ब्रह्मराक्षसतोषकाय नम:

ஸ்ரீசங்கராசார்ய அஷ்டோத்தரத்தரஶத நாமாவளியில் ब्रह्मराक्षसतोषकाय नम: ப்ரஹ்ம ராக்ஷஸ தோஷகாய நம: என்ற நாமாவின் பொருள் மற்றும் வரலாற்றுப் பின்னணி பலருக்கும் தெரிந்திராது. “ப்ரஹ்மராக்ஷஸை ஸந்தோஷப்படுத்தியவர்” என்பதே இதன் பொருள் ஆகும். ப்ராசீன ஶங்கர விஜயங்களில் உள்ளதாக அறியப்படும் இந்த வரலாறு பின்வருமாறு சொல்லப்படுகிறது:-

ஓர் அரசமரத்தில் ஒரு ப்ரஹ்மரக்ஷஸ் குடி கொண்டிருந்ததாயும், அம்மரத்தின் கீழ் ஸ்ரீஆசார்யாள் நிஷ்டையில் அமர்ந்திருந்ததாகவும், அப்பொழுது அது அவர்களின் அருகில் வந்து வணங்கி ‘நான் இந்த மரத்தடியில் வந்தவர்களை விழுங்குவது என்ற பழக்கம் உடையவன். ஆனால் உங்களை விழுங்க என்னால் இயலவில்லை; மிகவும் தேஜஸ்வியாகக் காணப்படும் தாங்கள், சில நாட்கள் இங்கேயே தங்கியிருந்து என்னை அனுக்ரஹித்து மகிழ்விக்க வேண்டும்’ என்று ப்ரார்த்தித்தது. அதற்கிணங்கிய ஸ்ரீஆசார்யாள், அவ்விதமே அங்கிருந்து அதை ஸந்தோஷப்படுத்தி, அதற்குச் ஶாப விமோசனமும் தந்து தமது விஜயத்தைத் தொடர்ந்தார்கள்.

இந்த வரலாற்று விளக்கம் “ஸ்ரீகுருதத்வ ரஹஸ்யம்” என்னும் நூலில் ஆங்கரை ப்ரஹ்மஸ்ரீ ரங்கஸ்வாமி ஶாஸ்த்ரிகளால் தரப்பட்டுள்ளது.

ஸ்ரீஶங்கேஶ்வரம்-கரவீரம் ஶங்கர மடத்தின் வரலாற்றுத் தொகுதிகளில் இந்த வரலாறு சற்று மாறுதலாகக் காண்கின்றது.

(தொடரும்)

ப்ரஹ்மராக்ஷஸ தோஷகாய நம:

ஸ்ரீசங்கராசார்ய அஷ்டோத்தரத்தரஶத நாமாவளியில் இருக்கும் ब्रह्मराक्षसतोषकाय नम:

ப்ரஹ்மராக்ஷஸ தோஷகாய நம: என்ற நாமாவின் பொருள் மற்றும் வரலாற்றுப் பின்னணி என்ன?

The divine monogram

The divine monogram “Shri Vidya-Shankara”, seen in the mudras of many Advaita Mathas in Karnataka, is revered as a symbol of Guru-Bhakti and spiritual unity. Though it is often said to represent the linga consecrated on the samadhi of Shri Vidyatirtha, there are differing views about its historical origin.

According to Sushama, this divine monogram “Vidya-Shankara” was formed by joining the names of “Shri Vidyatirtha and Shri Shankarananda”, the 51st and 52nd Jagadguru Shankaracharyas of Shri Kanchi Kamakoti Peetham.

स्वस्य स्वाचार्ययोश्च विद्यातीर्थशंकरानन्दयोः नाम्ना विद्यारण्य विद्याशंकर अन्यतराकारेण लाञ्छितानि श्रीमुखानि सर्वतोमुखानि प्रचारयन् आज्ञयैव शंकरानन्दस्य प्रातिष्ठिपत् पुनरपि वैदिकाचारम् ।