காலடியின் உண்மை வரலாறு…3

2532ஆவது ஸ்ரீசங்கர ஜயந்தி விசேஷ வெளியீடு – காலடியின் உண்மை வரலாறு…3 (1910 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து)

இத்தன்மைய அமாநுஷப் பிரஜ்ஞையோடு கூடிய ஸ்ரீமத் ஆதிசங்கராசார்ய ஸ்வாமிகளுடைய சரித்திரத்தைப் பற்றி அநேக கிரந்தங்கள் இருக்கின்றன.

அவற்றுள் ஸ்வாமிகளுடைய முக்கிய ஆசார்ய சிஷ்யர்களான ஸ்ரீசித்ஸுகாசார்யர், ஸ்ரீமதாநந்தகிரி யதீந்திரர் இயற்றிய பிராசீன சங்கரவிஜயமும், பிருஹத் சங்கர விஜயமுமே புராதனமாயும் பிராமாணிகமாயும் உள்ளவைகள்.

பிறகு ஸ்ரீவியாஸாசல கவியினால் இயற்றப்பட்ட வியாஸாசலீயம் என்னும் சங்கராப்யுதயமும், ஸ்ரீகோவிந்தநாதரால் இயற்றப்பட்ட கேரளீய சங்கர விஜயம் என்னும் ஆசார்ய சரித்திரமும், அனந்தானந்த கிரியினால் இயற்றப்பட்ட குருவிஜயமும், ஸ்ரீஸதாசிவ பிரஹ்மேந்திரரால் இயற்றப்பட்ட குருரத்நமாலிகையும் மத்திய காலத்தில் ஏற்பட்ட கிரந்தங்கள்.

ஸ்ரீசித்விலாஸ யதீந்திரர் இயற்றியதாக அச்சிடப்பட்ட சங்கரவிஜய விலாஸமும், ஸ்ரீமாதவாசாரியர் பெயரால் அபிநவகாளிதாஸர் இயற்றிய சங்கர திக்விஜய காவ்யமும், ஸ்ரீஸதாநந்த ஸ்வாமிகளால் இயற் றப்பட்ட சங்கரதிக்விஜய ஸாரமும், அவை களின் வியாக்யானமாகிய ஸ்ரீசங்கராசார்ய விஜயடிண்டிமமும், அத்வைத ராஜ்யலக்ஷ்மியும், துந்துபியும், தற்காலத்து மட அபிமானிகளால் இயற்றப்பட்ட கிரந்தங்களே.