ஸ்ரீசங்கர விஜயம்

ஸ்ரீகோவிலூர் மடாதிபதி அவர்களது பொருளுதவியைக்கொண்டு1918ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீசங்கர விஜயத்தில் காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் மடங்கள் ஸ்தாபித்தமை பற்றிய குறிப்பு :-

“ஸ்ரீ கந்தபுராணம் சிவரஹஸிய கண்டம் நவாம்சம் பதினாறாவது அத்யாயத்துள்ளும் சிவபுராணத்துள்ளும் தேவர்களாற் கூறப்பட்டிருக்கிற ஸ்ரீமத் சங்கராசார்ய ஸ்வாமி சரித்திரம், வியாஸர் முதலிய முனிவர்களாலும், ஸ்வாமிகளது காலத்திலிருந்து அவர்களோடு உண்டு, உடுத்து உலகியல், ஆன்மவியல் இரண்டிலும் அவர்களுடன் அனுபவத்திலிருந்து வந்த எம் ஆசிரிய பரம்பரைகளாலும் எழுதப் பெற்றிருந்த நூல்களின் ஆதாரங்கொண்டும், சித்விலாஸ ஸ்வாமி, விஞ்ஞான ஸ்வாமியாகிய ஸந்யாஸிகள் எழுதிவைத்துள்ள சங்கர விஜய விலாசம் என்னும் நூலின் துணைகொண்டும், வியாஸாசலீய மஹாகாவியத்தின் உதவிபெற்றும், பத்மபாதர் எழுதிய சரித்திரத்தின் உத்தமோபசாரங் கொண்டும் இச்சரித்திரம் எழுதப் பெற்றிருக்கிறது.

பிறகு ஸ்வாமி திக்விஜயம் செய்யப் புறப்பட்டுக் காஞ்சீபுரத்தில் ஒரு மடமும் ஐகன்னாதத்தில் ஒரு மடமும் துவாரகையில் ஒரு மடமும் பதரிகாச்ரமத்தில் ஒரு மடமும் ஸ்தாபித்தார்கள்.”

சமிவன க்ஷேத்திரமென்னும்

செட்டிநாட்டுக் கோவிலூர் மடம் அத்துவித மரபினது; இம்மடம் துங்கா ச்ருங்கேரி மடத்துடன் நீண்ட காலத் தொடர்பு உடையது மைசூரார் சொல்வர். இம்மடத்தின் அதிபராக விளங்கிய தவமுனிவரின் பொருளுதவியைக் கொண்டு சிவரஹஸ்யம், சித்விலாஸீயம், வ்யாஸாசலீயம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஸ்ரீ சங்கரபகவத் பாதாசார்ய ஸ்வாமிகள் சரித்திரம் என்னும் இந்நூல் வெளிவந்துள்ளது.

காரைக்குடி கம்பராமாயண ப்ரசாரகர் மோ.வெ. கோவிந்தராஜ ஐயங்கார் எழுதிய இந்த சரித்திர நூல் 1918ஆம் ஆண்டு இலவச வெளியீடாக வழங்கப்பட்டது.

भगवत्पाद श्रीआद्यशङ्कराचार्य का काल-निर्धारण एवं दीक्षास्थान

भगवत्पाद श्रीआद्यशङ्कराचार्य का काल-निर्धारण एवं दीक्षास्थान – महामहोपाध्याय प्रो. जयप्रकाशनारायण द्विवेदी (विद्यावाचस्पति)

शङ्कराचार्य-सन्देश ( अप्रैल – जून २०१८)

அணிந்துரை-குடந்தையுள் காஞ்சி நூல்

” ஸ்ரீஆதிசங்கரர் தமக்கெனக் காஞ்சியில் நிறுவிய “ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்” மிகத் தொன்மையாதாதலை 1916-இல் டி.ஏ.கோபிநாதராவ் பதிப்பித்த செப்பேடுகள் நிறுவும்…அம்பிகாபுரம் செப்பேடு ஸ்ரீமடத்தின் தொன்மையான செப்பேடாகும்.

இவ்வளவு தொன்மையான சான்றாதாரங்களை உடைய காஞ்சி மடமே குடந்தையுள் உறைந்தது என்பதையும் அவர்கள் ஆற்றிய சமய, சமுதாயப் பணிகளையும் சரஸ்வதி மகாலில் உள்ள மோடி என்னும் எழுத்து வகையால் எழுதப்பெற்ற பல நூறு மராட்டிய ஆவணங்கள் நிறுவுகின்றன…”

– T.Satyamurthy,

Superintending Archaeologist,

Archaeological Survey of India

(Ministry of H.R.D., Deptt. of Culture)

Thrissur Circle, Thoppinmoola Aranattukara,

Thrissur – 680 618.

Date: 26.11.98

(அணிந்துரை-குடந்தையுள் காஞ்சி நூல்- வித்வான் புலவர்.வே.ம அவர்கள்)

Virupaksha Sringeri Sankaracharya’s tour

This 1936, news publication brings attention to the diverse history of mathas across South India challenging the notion that Tunga matha was the only principal institution for the South.

A careful examination of historical records of these ancient mathas reveals the varied history of Shankarite institutions, emphasizing the need to avoid portraying others as mere branches of Tunga matha and promoting unity within the Shankara Sampradaya.

குடந்தையுள் காஞ்சி – அணிந்துரை

“..காலங்காலமாக எழுதப்பட்டு வரும் வரலாற்றில், காலத்தின் கண்ணாடியாக விளங்கும் வரலாற்றில், சில வேளைகளில் சிலரின் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப பொய்மையும் மெய்ம்மைப் புனைவு கொண்டு வந்து விடுவது உண்டு. வரலாற்று ஆய்வாளர்கள் கள ஆய்வு (Field Research) செய்து பொய்மைகளைப் புறம் தள்ளி மெய்ம்மை மேலோங்கச் செய்ய வேண்டும்…

இந்தியத் திருநாட்டில் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கேற்ப அயலார் ஆட்சியும், அந்நியர் ஆதிக்கமும் ஏற்பட்டு நம் தொன்மைச் சமயங்களுக்கும், சமய மடங்களுக்கும் தொல்லைகள் ஏற்படத் தொடங்கின. மண்ணையும் மாண்புறு தத்துவங்களையும், மக்கள் சமுதாயத்தையும் காக்க வேண்டி நம் சமயத் தலைவர்கள் மடங்களின் இருப்பிடங்களை, வழிபாட்டிடங்களைத் தற்காலிகமாக மாற்றிச் சமயத்தையும், மடத்தையும் காத்து வந்துள்ளனர். இவ்வாறு தெய்வத் திருமேனிகளையும், தெய்வப் பனுவல்களையும் அந்நியர்களிடமிருந்து காத்து வைக்க நம் முன்னோர்கள் அரும்பாடுபட்ட உண்மை நிகழ்ச்சிகளை வரலாறு நன்கறியும். இந்நெறியில் காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகளின் ஸ்ரீ மடத்துக்குரிய ஒரு மடம் குடந்தையில் உள்ளது. சமுதாயச் சூழல் காரணமாக காஞ்சி ஸ்ரீ சங்கராசார்ய மரபினர் சற்றேறக் குறைய 200 ஆண்டுகள் குடந்தையில் இருந்து சமயப்பணிகளும், சமுதாயப் பணிகளும் ஆற்றியுள்ளனர்…

அருளியல் நோக்கில் ஆதிசங்கரரால் அமைக்கப்பட்ட மடங்களுள் ஒரு சில பிற்காலத்தில் எண்ண மாற்றத்தின் காரணமாய் முதன்மை ஸ்ரீமடமான காஞ்சி மடத்தின் தொன்மைச் சிறப்பை அறியாமல் மனமாறுபாடு கொண்டனர்…

ஆதிசங்கர பகவத் பாதர் தம் இந்தியச் சுற்றுப் பயணங்களில் தேவைப்பட்ட இடங்களில் எல்லாம் மடங்களை நிறுவித் தம் பணியினைத் தொடரத் தம் சீடர்களை நியமித்துள்ளார். இவ்வாறு ஸ்ரீ சங்கரரால் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் மடங்கள் நிறுவப்பட்டன…”

– பேரா. டாக்டர். நாகப்பா நாச்சியப்பன் அவர்களின் அணிந்துரையிலிருந்து – புலவர்.வித்வான்.வே.ம.அவர்களின் குடந்தையுள் காஞ்சி, வரலாற்றாய்வு நூல்.

Shri Kanchi Kamakoti Matha’s Ancient Legacy Unveiled – Insights from the 1962-63 Survey, Predating the Common Era: 1

Shri Kanchi Kamakoti Matha’s Ancient Legacy Unveiled – Insights from the 1962-63 Survey, Predating the Common Era: 1

In 1962, Dr. R. Subrahmanyam of the Southern Circle of the Archaeological Survey conducted a trial-excavation in the premises of Shri Kanchi Kamakoti Shankaracharya Matha in Kanchipuram, drawing on insights from B.B. Lal, Director General of the Archaeological Survey of India.

This exploration unveiled the ancient roots of Shri Kanchi Kamakoti Peetha tracing back to the pre-Christian era. The excavation yielded pottery and antiquities datable to the early historical period. Though the excavation was limited to a small area it brought to light layers containing megalithic ware, rouletted ware, amphorae, a terracotta mould of punch-marked coins and a few terracotta figurines as well as Satavahana and Pallava coins, including one from Rajaraja Chola I (A.D. 980-1014). This also prompted further investigation into the Matha’s own antiquity.

It is also important to note that no such ASI excavations, similar to those conducted in the premises of Moolamnaya Kanchi matha in Kanchipuram in 1962 and later, have taken place in Tunga or other amnaya mathas which raises questions about their own history and authenticity of their claims against Kanchi matha

ச்ருங்கேரி மடம் எது?

ஆதிசங்கரர் துங்கபத்ரையின் கரையருகில் இருக்கும் ச்ருங்கேரியில் ஒரே ஒரு மடம் அமைத்தார். ஆனால் பிற்காலத்தில் அதனுடன் தொடர்புடைய எட்டு மடங்களும் தம்மைச் சிருங்கேரி மடங்கள் என்றே எனக் கூறிக் கொள்வதை ஆவணங்கள் காட்டும். இந்த எட்டு திருமடங்களுள் தொன்மையானது எது என்பதும் ஆய்வுக்குரியது.

1. கூடலி ச்ருங்கேரி,

2.துங்கா ச்ருங்கேரி,

3.ஆமனி ச்ருங்கேரி,

4.விரூபாக்ஷ ச்ருங்கேரி,

5.புஷ்பகிரி ச்ருங்கேரி,

6.சிவகங்கா ச்ருங்கேரி,

7.கரவீரம் ச்ருங்கேரி மற்றும்

8. சங்கேச்வரம் ச்ருங்கேரி

ஆகிய இவ்வெட்டு திருமடங்களுமே வரலாற்றுப் போக்கில் தம்மை ச்ருங்கேரி மடங்கள் எனக் கூறிக்கொள்கின்றன. இவற்றுள் சில காலப்போக்கில் நலிவுற்றன கூடலி, துங்கா மற்றும் புஷ்பகிரி மரபுகள் இன்றும் நிலைபெற்றுச் சமயப்பணிகள் புரிகின்றன.

எந்த மடத்திலும் அதிபதியாக இருந்திராத ஸ்ரீவித்யாரண்ய ஸ்வாமிகளால் இவ்வெட்டு ச்ருங்கேரி மடங்களும் தக்கவர்களை நிறுவிப் புனரமைக்கப்பட்டன.

கூடலி ச்ருங்கேரியும் அங்குள்ள மடத்தின் திருமரபும்

கூடலி ச்ருங்கேரி மடம் மிகத் தொன்மையானது. வித்யாநகரம், மஹாராஜதானி, ந்ருஸிம்ஹ க்ஷேத்ரம், தக்ஷிண வாராணஸீ, துங்கபத்ரா தீரம், ருஷ்யாச்ரமம், ருஷ்ய ச்ருங்க நகரம், ச்ருங்ககிரி ராமக்ஷேத்ரம், ராமேச்வரம் ஆகிய பெயர்கள் துங்கபத்ரா சங்கமத்தில் இருக்கும் கூடலி ச்ருங்கேரிக்கு உரியனவாகக் கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் பழைய வரலாற்றுக் குறிப்புகளால் அறியப்படுகின்றன.

துங்கபத்ரா கூடலி சங்கமத் தலத்தில்

ஸ்ரீசங்கரபகவத்பாதர்களால் தமது முதன்மைச் சீடர்களுள் ஒருவரான ஸ்ரீப்ருத்வீதர பாரதிக்காக ஸ்தாபித்தருளப்பட்ட தக்ஷிணாம்னாய சாரதா பீடம் பொலிவுடன் திகழ்கின்றது

மண்டனமிச்ர அக்ரஹாரம்

“அக்காலம் காஞ்சி தன்னில் அக்கிரகாரம் ஒன்றைத்

தக்காராம் சுரேசர் கட்டித் தானம் செய்தாரதற்கு

உரைத்ததால் மண்டன மிச்சிரரக்கிரகார மென்ன இக்

காலத்தினுமப்பேரே இசைப்பார்கள் எங்கும்மாதோ” -சங்கரவிஜயசிந்தாமணி

ஸ்ரீசுரேச்வராசார்யர் காஞ்சியில் ஒரு பெரும் அக்ரஹாரத்தை அமைத்தனர். ஸ்ரீகச்சபேச்வரர் கோயிலருகில் உள்ள இவ்வகரம் இவர்தம் பூர்வாச்ரமப் பெயரால் மண்டனமிச்ரர் அக்ரஹாரம் எனப்பட்டது.

ஸ்ரீசுரேச்வரர் காஞ்சியில் கலியாண்டு 2695 (பொ.யு.மு. 407)-ல் (பவ-ஜ்யேஷ்ட-சுக்லதுவாதசி) சித்தியுற்றனர். இன்றும் ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களின் ஸ்ரீமடத்தில் ஸ்ரீசுரேச்வரர் சந்நிதியும் திருவுருவுமுள்ளன.

இவர்க்குப் பின் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தில் இவரால் போஷிக்கப்பட்ட சிறுவரான ஸ்ரீ சர்வக்ஞாத்மேந்திரர் ஸ்ரீபீடம் ஏறினர். -வித்வான் புலவர் வே.ம. அவர்கள்

ராமேச்வரம் மகாராஷ்டிர ஆரியர்களின் சாதித் தகுதி – துங்கா மடத்தார் நீதிமன்றத்தின் முன்பாகச் சொல்லியுள்ள சங்கதி

ராமேச்வரம் மகாராஷ்டிர ஆரியர்களின் சாதித் தகுதி பற்றி 1844ஆம் ஆண்டு திருவானைக்கா தாடங்க ப்ரதிஷ்டை வழக்கில் துங்கா மடத்தார் நீதிமன்றத்தின் முன்பாகச் சொல்லியுள்ள சங்கதி இது.

“ராமேசுவரம் ஸ்தலத்திலிருக்கும் ஆரிய ஜாதியார்களுக்கு பிராமணத்துவமில்லையென்று மேற்படி ஸ்தலம் பிராம்மணாள் விவாதப்பட்டு ஸ்ரீங்கேரி ஸ்ரீஜகத்குரு சுவாமியளவாளிடத்தில் வியாச்சியம் சொல்லிக்கொண்டதை ஸ்ரீ சுவாமியளவாள் கேட்டு சாஸ்திரப்படி ஆரியாளுக்கு பிராமணத்துவமில்லை யென்றும், அவாளிடத்தில் உகத ஸ்பரிசம் செய்யக் கூடாதென்றும், ஸ்ரீமுகமனுப்பினதற்கு மேற்படி ஆரியாள் சம்மதிப்படாமல் (வருஷம் தேதியாதி இல்லை) மதுரை ஜில்லா கோர்ட்டில் வியாச்சியம் செய்ததில் மேற்படி சுவாமியளவாள் கொடுத்த ஸ்ரீமுகத்தை தானே உறுதிப்படுத்தி…”

ராமேச்வரத்துக்கு முதன்முதலாக தரிசனத்திற்காக யாத்திரையாக வந்த துங்கா மடத்து ஆசார்யர் சாஸ்திரப்படி ராமேச்வரத்து ஆர்யர்களுக்கு பிராமணத்துவம் இல்லையாதலின் அவர்கள் தொட்ட ஜலத்தை ஏற்கக்கூடாது என்பதான உத்தரவைப் போட்டார்; அதற்காக ஒரு திருமுகமும் தனியே வெளியிட்டார் என்று அவர்கள் தரப்பில் தாக்கலான வழக்குரைப் பகுதி மூலம் நமக்குத் தெரியவருகிறது.

19ஆம் நூற்றாண்டில் ராமேச்வரத்து ஆர்யர்களை அந்தணர்களாக ஏற்கத் தடை விதித்தது சாஸ்திரம் என்றால்…

20ஆம் நூற்றாண்டில் அதே மரபினரைத் தகுதி வாய்ந்த அந்தணர்களாக மாற்றி மந்திரம் உபதேசிக்கவும், சீடர்களாகக் கொள்ளவும் எந்த சாஸ்திரம் அனுமதித்தது?

என்னும் கேள்வி எழுகிறது.

இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பாக வாசகர் தரப்பிலிருந்து எழும் கேள்விகளைப் பொறுத்து நமது குறிப்புரை தொடரும். வரலாறு தொடர்பான கருத்துகளை மட்டுமே எழுதலாம். தேவையற்ற மரபிற்கொவ்வாத விஷயங்களைத் தவிர்க்கவும். நன்றிகள் பல.