காலடியின் உண்மை வரலாறு…7

2532ஆவது ஸ்ரீசங்கர ஜயந்தி விசேஷ வெளியீடு – காலடியின் உண்மை வரலாறு…7 (1910 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து)

அச்சமயங்களில் ஸ்ரீமத் ஆதிசங்கராசார்ய ஸ்வாமிகளுக்கு அவ்விடத்தில் ஓர் ஆலயமும், மடமும் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்கிற அவருடைய ( நடுக்காவேரி ஸ்ரீநிவாஸ சாஸ்திரியார்) பிரார்த்தனையைக் கேட்டிருப்பவர் அநேகர் உளர்.

காலடியில் ஒரு பிராஹ்மணர்கூட வஸிக்காமல் மிலேச்ச பூயிஷ்டமாய் இருந்ததைப்பற்றி அவர் வருந்தியதையும் அநேகர் கேள்வியுற்றிருக்கின்றனர்.

அந்தோ ! இக்காலடி க்ஷேத்திரத்தின் மஹிமையையும், ஜீவநதியாய் விளங்கும் சூர்ணீ நதிக்கரையில் அது அமைக்கப்பட்டிருக்கும் தன்மையையும், பிராஹ்மணாக்ரஹாரத்திற்கே உரித்தான அதனது ஸந்நிவேசத்தையும், அங்கு அமரிக்கையுடன் பிரஸன்னமாய் வளை ந்து பிரவஹிக்கின்ற சூர்ணி நதியின் அழகையும், அதன் கரைகளிலுள்ள மரச்சோலைகளின் வனப்பையும் வர்ணிக்க யாவரால் ஆகும்?

இவ்வதிசயங்களை யெல்லாம் கண்ணாரக் கண்டே (நடுக்காவேரி) ஸ்ரீநிவாஸ சாஸ்திரியார் அவர்கள் சென்ற விகாரி வருஷத்தில் (1899-1900) ஸ்ரீமதாசார்ய ஜயந்தி மஹோத்ஸவ ஸமயத்தில் “ஸ்ரீஜகத்குரு தாமஸேவாசதகம்” என்னும் ஓர் அழகிய பிரபந்தத்தை ஸ்ரீமதாசார்ய ஸ்வாமிகளின் ஜனன பூமியாகிய இக்காலடி க்ஷேத்திரத்தின் பெருமையைக் குறித்து எழுதியிருக்கின்றனர்.

ஆனால் ஸ்ரீசாஸ்திரியார் அவர்கள் தமது கோரிக்கை முடிவுபெறாமலே திடீரென்று விண்ணுலகம் சென்றதற்கு யாம் வருந்துகின்றோம்.

(தொடரும்)