This information is found in the Sri Kalyana Sevak Rathotsava Pushpa, 1974 (Pushpam 21 of Sri Kalyana Sevaka Granthamala) of Shri Shankeswara Matha.

This Marathi passage narrates in detail, the daily worship of Malayala Brahman, (the guardian deity of the Matha), under a peepul tree (asvattha tree) in the Advaita Matha at Shankeswar in the Karnataka region and also of a special festival of the deity on Rathasaptami day. But the story part of the passage speaks of Shri Adi Sankaracharya’s meeting a Brahmarakshas during the former’s wide travels and overcoming the Brahmarakshas (Malayala Brahman).

Malayala Brahman, as per the story, on admiring the superb attainments and characteristics of the Acharya, offers to serve him, whereupon He ordains Malayala Brahman to protect the institutions established by him and says that Malayala Brahman will be worshipped by the heads of those institutions.(Sri Vidyaranya, Published by The Vidyaranya Vidyapitha Trust, Hampi, 1983)

ஸ்ரீஶங்கேஶ்வரம் கரவீரம் மடத்தில் ஒவ்வொரு வருடமும் ரதஸப்தமி அன்று, ஸ்ரீசங்கர பகவத்பாதர்கள் அவர்களின் அருள் வரலாற்றுடன் தொடர்புடையதும், அந்த மடத்தின் காவல் தேவதையுமான மலையாள ப்ரஹ்மா என்னும் ப்ரஹ்மராக்ஷஸுக்குப் பூஜைகள் நடைபெறும்.

இதற்கென, ஹிரண்யகேசி நதிக்கரையில் உள்ள அந்த மடத்தின் தென்புறத்தில் இருக்கும் அஶ்வத்த வ்ருக்ஷத்தின் அடியில் சிவலிங்கத்தை ப்ரதிஷ்டித்து ருத்ராபிஷேகம் செய்து வழிபட்ட பிறகு இதற்கான பூஜைகள் தொடரும்.

ஸ்ரீகரவீர மடத்தின் பழைய வரலாற்றின்படி, ஸ்ரீசங்கரார்ய ஸ்வாமிகள் அவர்கள் மலையாள தேசத்தில் விஜயம் செய்து கொண்டிருந்தபோது, ​​அங்கு ஓரிடத்தில் ஒரு அஶ்வத்த மரத்தில் இருந்த ப்ரஹ்ம ராக்ஷஸ் அவரை வாதிட்டு வெல்ல முயன்றது. அதைத் தோற்கடித்த ஸ்ரீஆசார்யாளின் வாதத் திறன், மதிநுட்பம், புலமை, நேர்மை, தன்னலமற்ற தன்மை போன்ற குணங்களின் கோர்வையைக் கண்டு கொண்ட ப்ரஹ்மராக்ஷஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்து, ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் பாதங்களில் பணிவுடன் வணங்கி, ‘நான் தங்கள் சேவகன், அருள் கூர்ந்து தங்களுக்கு சேவை செய்ய எனக்கு உத்தரவு பிறப்பிக்கவும்’ என்று பணிவுடன் வேண்டியது.

ஸ்ரீஆசார்யாள் அவர்களும், தாம் நிறுவிய மடங்களை மலையாள ப்ரஹ்மா பாதுகாத்துவர வேண்டும் எனவும், அந்தந்த மடாதிபதிகளும் தமது மடத்தின் காவல் தெய்வமாக அவரை வணங்குவர், என்றும் அருளினார்.

ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமிகள் அவர்களின் ஆஜ்ஞைப்படி, மடத்தின் காவல் தெய்வமான மலையாள ப்ரஹ்மா வழிபாடு, மடத்தின் பாரம்பரியத்தின்படி தினமும் தொடர வேண்டும். அஶ்வத்த மரத்தினடியில் ருத்ராபிஷேகம் – பூஜை – நைவேத்யம் போன்றவை சிறப்படன் செய்யப்பட வேண்டும்.

1960ஆம் ஆண்டில் ஒரு சமயம் இம்மரம் விழுந்து விட்டதால், மரபு வழக்கப்படி அந்த இடத்தில் ஒரு புதிய அஶ்வத்த மரம் மீண்டும் நடப்பட்டு பூஜைகள் நடந்தேறின.

(ஸ்ரீ கல்யாண் க்ஷேத்ரக் ரதோத்ஸவ புஷ்பம் 1974)

ब्रह्मराक्षसतोषकाय नम:

ஸ்ரீசங்கராசார்ய அஷ்டோத்தரத்தரஶத நாமாவளியில் ब्रह्मराक्षसतोषकाय नम: ப்ரஹ்ம ராக்ஷஸ தோஷகாய நம: என்ற நாமாவின் பொருள் மற்றும் வரலாற்றுப் பின்னணி பலருக்கும் தெரிந்திராது. “ப்ரஹ்மராக்ஷஸை ஸந்தோஷப்படுத்தியவர்” என்பதே இதன் பொருள் ஆகும். ப்ராசீன ஶங்கர விஜயங்களில் உள்ளதாக அறியப்படும் இந்த வரலாறு பின்வருமாறு சொல்லப்படுகிறது:-

ஓர் அரசமரத்தில் ஒரு ப்ரஹ்மரக்ஷஸ் குடி கொண்டிருந்ததாயும், அம்மரத்தின் கீழ் ஸ்ரீஆசார்யாள் நிஷ்டையில் அமர்ந்திருந்ததாகவும், அப்பொழுது அது அவர்களின் அருகில் வந்து வணங்கி ‘நான் இந்த மரத்தடியில் வந்தவர்களை விழுங்குவது என்ற பழக்கம் உடையவன். ஆனால் உங்களை விழுங்க என்னால் இயலவில்லை; மிகவும் தேஜஸ்வியாகக் காணப்படும் தாங்கள், சில நாட்கள் இங்கேயே தங்கியிருந்து என்னை அனுக்ரஹித்து மகிழ்விக்க வேண்டும்’ என்று ப்ரார்த்தித்தது. அதற்கிணங்கிய ஸ்ரீஆசார்யாள், அவ்விதமே அங்கிருந்து அதை ஸந்தோஷப்படுத்தி, அதற்குச் ஶாப விமோசனமும் தந்து தமது விஜயத்தைத் தொடர்ந்தார்கள்.

இந்த வரலாற்று விளக்கம் “ஸ்ரீகுருதத்வ ரஹஸ்யம்” என்னும் நூலில் ஆங்கரை ப்ரஹ்மஸ்ரீ ரங்கஸ்வாமி ஶாஸ்த்ரிகளால் தரப்பட்டுள்ளது.

ஸ்ரீஶங்கேஶ்வரம்-கரவீரம் ஶங்கர மடத்தின் வரலாற்றுத் தொகுதிகளில் இந்த வரலாறு சற்று மாறுதலாகக் காண்கின்றது.

(தொடரும்)

ப்ரஹ்மராக்ஷஸ தோஷகாய நம:

ஸ்ரீசங்கராசார்ய அஷ்டோத்தரத்தரஶத நாமாவளியில் இருக்கும் ब्रह्मराक्षसतोषकाय नम:

ப்ரஹ்மராக்ஷஸ தோஷகாய நம: என்ற நாமாவின் பொருள் மற்றும் வரலாற்றுப் பின்னணி என்ன?

The divine monogram

The divine monogram “Shri Vidya-Shankara”, seen in the mudras of many Advaita Mathas in Karnataka, is revered as a symbol of Guru-Bhakti and spiritual unity. Though it is often said to represent the linga consecrated on the samadhi of Shri Vidyatirtha, there are differing views about its historical origin.

According to Sushama, this divine monogram “Vidya-Shankara” was formed by joining the names of “Shri Vidyatirtha and Shri Shankarananda”, the 51st and 52nd Jagadguru Shankaracharyas of Shri Kanchi Kamakoti Peetham.

स्वस्य स्वाचार्ययोश्च विद्यातीर्थशंकरानन्दयोः नाम्ना विद्यारण्य विद्याशंकर अन्यतराकारेण लाञ्छितानि श्रीमुखानि सर्वतोमुखानि प्रचारयन् आज्ञयैव शंकरानन्दस्य प्रातिष्ठिपत् पुनरपि वैदिकाचारम् ।

Appointment of Successor of Sivaganga Math (1918-1919)

Sri Sivaganga Math was founded in 1615 by Sri Sankara Bharati Swami at the request of the Mysore King. It has always been an independent Advaita Math, not under any other Math. This 1918 Government note records the passing of the then Swamigal of Sri Sivaganga Math at Pondicherry and the arrangements made by the Mysore Muzrai Department for the rituals in connection with his maha-samadhi and succession. The late Swamigal, with the approval of His Highness the Maharaja of Mysore, had chosen Vedamurti Rama Sesha Sastri to be initiated into Sanyasa Ashrama as his successor. After his demise, the Government also recognized the new head as Sri Sachidananda Abhinava Subrahmanya Gangadhara Bharati Swami. Earlier, in 1831, the Maharaja of Mysore had settled a dispute between the Sivaganga and Tunga Maths by declaring that the Sivaganga Math shall enjoy the same rights and privileges as Tunga Math, affirming its equal and independent standing. Further, the Government Proceedings dated 4th January 1919 issued by the General and Revenue Departments of His Highness the Maharaja of Mysore formally recognized this succession. The order records, with deep regret, the Swamigal’s passing and confirms that, in accordance with the prior approval of the Government, Vedamurti Rama Sesha Sastri was inducted into Sanyasa Ashrama and recognized as the new head under the title Sri Sachidanandabhinava Subrahmanya Gangadhara Bharati Swami. Neither the previous Swami nor the Government sought any permission or approval from any other Matha for this nomination or installation, confirming that the Sivaganga Math is a separate religious denominational institution.

கேள்வியும் பதிலும்

கேள்வியும் பதிலும்

அவர் : “மாதவீய சங்கர விஜயத்தில் ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகளுடைய ஸித்தி ஸ்தலம் கேதாரம்; அங்கிருந்துதான் அவர் கைலாஸம் அடைந்தார் என்று ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டுள்ளது. அவர் திரும்பி வந்ததாக எந்த இடத்திலும் சொல்லவில்லை. அதனால், கேதாரம்தான் ஸித்தி ஸ்தலம். மாதவீய சங்கர விஜயத்தில் இல்லாத எதையும் நாங்கள் ஏற்க மாட்டோம்”.

இவர்: “அப்படியானால் இதற்கு பதில் சொல்லுங்கள். தமது விரிவான திக்விஜய யாத்திரையின் நிறைவாகக் கேதாரம் சென்று அங்கிருந்தே கைலாஸம் அடைந்த ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் திரும்பி வரவேயில்லை என்று கதையை முடிக்கிறீர்கள்.

ஆனால், உங்களுடைய மாதவீயகாரர் சொல்லாதவை-

1. கைலாசத்தில் ஈசனாரின் அருளால் ஸௌந்தர்யலஹரிச் சுவடி அவருக்குக் கிடைத்தமை,

2. ஸ்ரீசந்த்ரமௌலீச்வர ஸ்படிக லிங்கங்களை அவர் பெற்றமை .

ஆனால், இந்த இரண்டு வரலாறுகளும் உங்களுடைய மடத்தில் பழமையாக வழங்கி வரும் ஸ்ரீசங்கராசார்ய அஷ்டோத்தர சதநாம அர்ச்சனைக் கோவையில்

सौन्दर्यलहरीमुख्यबहुस्तोत्रविधायकाय नमः

कैलासयात्रासम्प्राप्तचन्द्रमौलिप्रपूजकाय नमः

என்பனவாகக் காண்கின்றதை யாவரும் அறிவார்கள்.

ஸ்ரீஸௌந்தர்யலஹரீ ஸ்தோத்ரம், ஸ்ரீசந்த்ரமௌலீச்வர லிங்கங்கள் ஆகியவற்றை ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாசார்யர் பெற்றுக் கொண்டு, கைலாஸத்திலிருந்து திரும்பி வந்தனர் என்கிற மிக முக்கியமான சங்கர விஜய வரலாற்றுச் சம்பவங்களை, அன்றாடம் உங்களுடைய வழக்கத்தில் இருக்கும் பாரம்பர்ய அர்ச்சனைக் கோவை வாயிலாக ஏற்கனவே நீங்கள் ஏற்றிருப்பதால் ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகளுடைய ஸித்தி ஸ்தலம் கேதாரம் என்ற மாதவீய சங்கர விஜயக் கருத்தை நீங்களாகவே நிராகரித்து விட்டீர்கள். பின் எதற்கு இந்த கேதாரத்தில் ஸித்தி என்கிற நகைப்புக்குரிய வீண் வாதம்?”

மாதவீய சங்கர விஜயம் பலவற்றைச் சொல்ல விட்டிருக்கிறது.

श्रीचक्रात्मकताटङ्कतोषिताम्बामनोरथाय नमः

என்று மேற்சொன்ன அர்ச்சனைக் கோவையில் உள்ள வரலாற்றைக் காஞ்சி மடம் ஏற்கிறது. ஆனால், திருவானைக்காவில் தாடங்க ப்ரதிஷ்டை செய்த வரலாற்றை மாதவியகாரர் சொல்லவேயில்லை. அவரால் சொல்லப்படாத காஞ்சியில் ஸ்ரீகாமகோடி பீடம் ஸ்ரீமடம் ஸ்தாபனம், யோகலிங்க ப்ரதிஷ்டை, ஸர்வஜ்ஞ பீடாரோஹணம், அங்கேயே ஸித்தியுற்றது என்பனவற்றை ஏற்க மறுக்கும் நீங்கள் பிறகு ஏன் மாதவீயத்தில் இல்லாத ஜம்புகேஶ்வரம் தாடங்க ப்ரதிஷ்டை உரிமை கோரி இரண்டு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து அனாவசியமாக மெனக்கெட வேண்டும்?

Discussion

பொது விவாதம் : கோரிக்கை

துங்கா மடம் சுவாமிகளின் சார்பில் 1844ஆம் ஆண்டு திருவானைக் கோவில் ஸ்ரீஅகிலாண்டேஶ்வரீ அம்பாளுக்குத் தாடங்க ப்ரதிஷ்டை செய்யத் தமக்கு மட்டுமே உரிமை இருப்பதாகக் கூறி திருச்சிராப்பள்ளி சதர் அமீன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அசல் 95ஆம் எண் வழக்கில் கீழ்க்கண்ட இரண்டு முக்கிய வாதங்கள் ஸ்ரீசங்கர விஜயம் மற்றும் இதர தரவுகள் அடிப்படையில் அவர்களது தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டன.

முதலாவது :-

கலியுகம் பிறந்து 3000 வருஷத்திற்குப் பின் விக்ரமாதித்யன் ராஜரீகத்தில் ஸ்ரீசங்கரபகவத்பாதர் கேரள தேசத்தில் அவதாரம் செய்தார்.(அதாவது கலி தொடக்கம் பொ.யு.மு. 3201இதில் 3000 ஆண்டுகள் சென்றது போக பொ.யு.மு. 201ஆம் ஆண்டு).

இரண்டாவது:-

காசியில் தம்மை தரிசித்த ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமிகளுக்கு 5 லிங்கங்களை ஸ்ரீவிஶ்வநாதர் கொடுத்தார்.

துங்கா மடம் ஸ்ரீநரசிம்ம பாரதி சுவாமிகளும் அவருடைய சிஷ்ய ப்ரசிஷ்யர்களும் இவற்றை அக்காலத்தில் மறுக்காமல் ஏற்று வந்துள்ளனர்.ஆனால், மிகச் சமீபகாலமாக ஸ்ரீசங்கராசார்யர் அவதார காலம் பொ.யு 788; அவர் ஈசனாரிடமிருந்து 4 லிங்கங்கள் மட்டுமே பெற்றார்; அவற்றை 4 ஆம்னாய மடங்களிலும் கொடுத்தார்; இவற்றுக்கு அங்கே பூஜை நடப்பதாக முற்றிலுமாக மாற்றிப் பொது ஊடகங்களில் புதுப் பிரச்சாரம் செய்வது ஏன்? ஸ்ரீபகவத்பாதாசார்யர்களின் அருள் வரலாற்றை இவ்வாறு துங்கா மடத்தினர் மட்டும் தங்கள் மனம்போனபடி மாற்றிக் கொண்டது ஏன் என்கிற விஷயத்தில் பொது விவாதம் நடத்த மாதவிய-மடாம்னாய கூட்டணி பண்டிதர்கள் முன் வருவார்களா?