ஸ்ரீசங்கர விஜயம் — 9

ஸ்ரீசங்கர விஜயம் மண்டனமிச்ர விஜயம் பேராசிரியர் ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி., (ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)

திக்விஜயம் செய்த தீரர் சங்கரர்
திகழுயர் சீடர் சிலபே ருடனே
கர்மமார்க் கத்தைக் கனதீ விரமாய்க் கையாண்டு வந்த மண்டன மிச்ரர்
மிளிர்ந்த பட்டணம் மாகிஷ் மதிக்கு
வந்தே அவரை வாதுக் கழைத்தார்;
சாக்ஷாத் சரஸ்வதி தேவியே யங்கு
ஸரஸ வாணியெனும் பெயர்ப்பெண் மணியாய்
மண்டன மிச்ரரின் மனைவியாய் விளங்கினாள்
ஈண்டிவர் வாதத்தைக் கண்டு களிக்கவே
வேண்டினர் அவளை நியாயம் வழங்கி
வெற்றி தோல்வி விளித்துக் கூற ;
தன்நிலை யறிந்த தேவி யவளும்
உன்னிப் பார்த்தோர் உபாயம் செய்தாள்;
மங்கை யிரண்டு மாலைகள் கொணர்ந்து
அங்கவ ரிடமே அளித்துச் சொன்னாள்;
மலர்மாலை தனையே மார்பி லணிந்து
புலவர் நீவீர் தொடங்குவீர் வாதம் ;
தோற்றவர் மாலை துவண்டு வதங்கும்,
ஏற்போம் அதனை நாம் இறுதிமுடி வாக
மதிவாண ரிருவரும் மனமுவந் தங்கே
விதிப்படி வெகுநாள் வாதம் நடத்தினர்;
மண்டன மிச்ரரின் மாலை வாடவே
கண்டனள் சரஸ வாணியு மதனை ;
“என்றன் கணவருக்கு யானோர் அடிமை,
என்னையும் ஜயிப்பது உமக்கே கடமை;
அதில்நீர் தவறினால் அவரை வென்றது
மதிக்கத்தகா” தெனமாதவள் உரைத்தாள், (9/20)

Shri Sureshvaracharya – Part 3 (Contd.)

(Special Series of Articles commemorating the Maha Kumbhabhishekam of Shri Sureshvaracharya Adhishtanam Shrine at Shri Kanchi Kamakoti Peetham Shrimatham, Kanchipuram on 03.5.2024)

Shri Jnananandendra Sarasvati wrote a commentary named Chandrika on Shri Sureshvaracharya’s Naishkarmya siddhi. We conclude with his tribute to Shri Sureshvaracharya as “The sagara which gave Naishkarmyasiddhi which is like amrta to the learned, I worship that ocean of immortal jnana Sureshvara”

नैष्कर्म्यसिद्ध्यभिधया सुधया सुधियां ददौ। योऽमृतत्वं नमामस्तं सुरेश्वरसुधानिधिम्॥

The concluding section of Naishkarmya Siddhi Sudha Vyakhya published in 1891 Bombay Central Govt Book Depot further establishes that the name of the Guru of Shri Jnanottama is Shri Satyabodha. The verse says that the arguments of Purvamimamsa, Baudshas, Prabhakaras and Naiyayikas and Vaisheshikas was defeated by Padakashata, of Satyabodhacharya the abode of yama and niyama. The next verse also refers to the author as सर्वज्ञाश्रमचन्द्रमास्त्रिजगतीसर्वज्ञचूडामणिः

The moon in “Sarvajnashrama” and the crest jewel among Sarvajnas in the three worlds that removed the darkness and gave rise to the serenity of inner contemplation. May the sudhadhaaraa of the Jagadgurus of Moolamnaya Sarvajna Shri Kanchi Kamakoti from remove our and give rise to that experience of internal शान्तिः and unflinching shraddha to the Guruparampara

Shri Sureshvaracharya – Part 3

(Special Series of Articles commemorating the Maha Kumbhabhishekam of Shri Sureshvaracharya Adhishtanam Shrine at Shri Kanchi Kamakoti Peetham Shrimatham, Kanchipuram on 03.5.2024.(Part-3)

Other references to Shri Sureshvaracharya in the Guruparampara of Shri Kanchi Kamakoti Peetam

The Gururatnamala of Shri Sadashiva Brahmendra Saraswati , disciple of the 57th Acharya of Moolamnaya Sarvajna Shri Kanchi Kamakoti Peetam, was one of the earliest works of Shri Sadashiva Brahmendra that was published (1895) several decades before the Vani Vilas publications of Shri Sadashivendra Saraswati appeared.

परम् अन्तिकसत्-सुरेश्वराद्यैः

परमाद्वैत-मतं स्फुटं प्रवेद्य।

परिकाञ्चिपुरं परे विलीनः

परमायास्तु शिवाय सद्गुरुर्नः॥

गुरुरत्नमाला – ३३.

The Gururatnamala says, “Expounding on the supreme advaitasiddhanta clearly accompanied by shishyas such as Shri Sureshvaracharya who were by His side, (Shri Shankaracharya) became one with Paradevata. May that Sadguru bless us with auspiciousness.”

Shri Sureshvaracharya and Shri Kanchi Kamakoti Pitham Guru Parampara

As stated previously, Shri Sureshvaracharya served as the guardian and mentor of the young Shri Sarvajnatmendra Saraswati Shankaracharya Swamigal, the third Acharya of Shri Kamakoti Peetam. This is owing to the latter’s young age at the time of taking sannyasa. Shri Sarvajnatmendra Saraswati Shankaracharya Swamigal’s Sankshepa Shareerakam pays tribute to his vidyaguru Shri Sureshvaracharya saying that, “May the dust of the feet of Sureshvaracharya be victorious – We are grateful by gaining whose proximity, for their unlimited fame of uplifting innumerable disciples”

यदीयसम्पर्कमवाप्य केवलं वयं कृतार्था निरवद्यकीर्तयः। जगत्सु ते तारितशिष्यपङ्क्तयः जयन्ति देवेश्वरपादरेणवः॥

Acharya Shri Madhusudana Saraswati comments on this verse saying, “इदानीं स्वगुरुं वार्तिककारं पूजयति। He then glosses देवेश्वरस्य as “सुरेश्वरस्य”establishing the identity of the guru of Shri Sarvajnatmendra Saraswati.

Another commentary, the Anvayarthaprakashika on Sankshepashareerakam also confirms this identity, reinforcing this understanding within the tradition.

Many scholars have hypothesized on the concluding work of Sankshepa Sharirakam, references to the king named there and many of the conclusions are are inconclusive. Leaving these surmises and to historians, we focus on revelling in the greatness and glory of Shankara Sampradaya.

Shri Sarvajnatma refers to the Bhagavan at Anantashayanam or Tiruvananthapuram (अविरलपदपङ्क्तिः पद्मनाभस्य पुण्या॥). As per the Kanchi Kamakoti Peetam Guru Parampara, Shri Sarvjnatmendra Saraswati belonged to Brahmadesham which is geographically proximal to Tiruvanantapuram.

The fourth Acharya Jagadguru Shri Satyabodhendra Saraswati Swamigal has composed a work named Padakashatam. This is referred to in the texts of Punyashloka Manjari (this was one of the early grantha publications that was printed in Kumbhakonam in the late 1800s)

The 65th Acharya of Shri Kanchi Kamakoti Moolamnaya Sarvajna Peetam Shri Sudarshana Mahadevendra Saraswati Shankaracharya Swamigal pays tribute to the fifth Acharya in his Jagadguru Parampara Stava saying

“The noble Jnanananda muni also known as Jnanottama, who was immersed in the worship of Chandrachuda. He was the author of Chandrika. I seek refuge in Him”

ज्ञानानन्द-मुनीन्द्रार्यं ज्ञानोत्तम-पराभिधम् । चन्द्रचूड-पदासक्तं चन्द्रिका-कृतम् आश्रये ॥ १३ ॥

From this, we understand that the fifth Acharya, Shri Jnananandendra Sarasvati, was also known as Shri Jnanaghana (or Bodhaghana). The Punyashloka manjari pays tribute to him as “ज्ञानोत्तम इति अवाप्त बिरुदः” and refers to him as being born in “Chola desha in the village named Mangala”.

* The Chola desha from times immemorial has been one of the mainstays of Shri Kanchi Kamakoti Peetam

ஸ்ரீசங்கர விஜயம் – 7

மநீஷா பஞ்சகம் இயற்றியது பேராசிரியர் ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி., (ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)

கங்கா நதியின் கரைபுரள் நீரில்

சங்கரப் பெரியோன் சதுர்பெற ஆடித்

தனிப்பெரு வீதியில் தாம்வரும் போது

நனிப்பெரு நாய்கள் நான்கி னுடனே

சண்டாள னொருவன் வழியில் நின்றான்;

கண்டா ரவனை ; கனவழி நீங்க

விண்டார் விமலர் சங்கர பாதர்;

வெருண்ட வவனும் வெகுண்டு நோக்கி,

“தெருண்ட நும்முப தேசம் நன்றுநன்று!

எல்லாம் இறைவ னென்றே அறைவீர்!

சொல்லா மதுவு மென்பா லன்றோ!

நானு மிறைவனே போவதேன் தூரம்!

ஏனு மெனக் கென்ன வுரைப்பீர்!” என்றே வினவ,

இறைவர் ஆய்ந்து, ஐந்து சுலோக மழகுட னமைத்து

மைந்தர் வாழ மநீஷா பஞ்சகம்

என்றப் பெருநூ லவனுக் கருளி,

”ஆன்ம ஞானி யெவனுமென் னாசான் ;

யான்வ ணங்கு மடிகளு மவனே” என்று கூற, ஏதிலன் மறைந்தான் ;

நன்றே காசி நாதன் தோன்றினன்.(7/20)

ஸ்ரீசங்கர விஜயம் – 5

குருதரிசனம்

பேராசிரியர்

ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி.,

(ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)

நர்மதை நதிக்கரையில் மலைக்குகை யொன்றில்

நற்றவ மிருந்தார் ஸ்ரீகோவிந்த பாதர்

நாடினா ரவரை நலமிகு சங்கரர் ;

நற்குரு வாகவே ஏற்கும்எண் ணத்துடன்

சற்குரு சமீபம் சங்கரர் சென்றார்;

நிஷ்டையி லிருந்தார் இஷ்ட கோவிந்தர் ; விரைவாய் நர்மதை வந்தவெள் ளத்தால் விழுங்கியே சென்றது வெகுவாய்க் கிராமங்களை ;

வெள்ளத்தை யுடனே வேகமாய்க் கடத்தில்

உள்ளடக்கி னாரவ் வுத்தமர் சங்கரர்;

அபாயம் நீங்கிய ஆனந்தக் கூத்தில் ஆரவாரித்தனர் அக்கிராம வாசிகள்

நிஷ்டை கலைந்துகண் நோக்கிய கோவிந்தர்

நிர்மல சிரேஷ்டர் நிற்கக் கண்டார்;

உணர்ந்தார் அவர்மகிமை உள்ளம் மகிழ்ந்தார்;

உவகையுட னவரை ஏற்றார் சீடனாய். (5/20)

ஸ்ரீசங்கர விஜயம் – 4

ஸ்ரீசங்கர விஜயம்

பேராசிரியர்

ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி.,

(ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)

துறவு

மகனுக் கோர்மணம் செய்வித்து மகிழ மனத்திற் கொண்டாள் மாதா ஆர் யாம்பிகை;

சங்கர ரோவெனில் சந்நியாசம் ஏற்கச் சந்தர்ப்ப மொன்றைச் சடுதிகைக் கொண்டார்;

தாயும் மகனும் தனிநீ ராடுகையில்

சேயின் காலையோர் முதலை பிடித்தது;

அலறினாள் தாயும், அழுது துடித்தாள்; பதறினாள் அங்கே பயமிகக் கொண்டு ;

“சந்நியாச ஆச்ரமம் சங்கரன் ஏகற்கு

அன்னை விடைதந்தால் அகலும் சங்கடம்;

கவலைப் படாதீர் கண்ணீர் விடாதீர்; முதலையின் வாக்கிது முடிவைச் சொல்லுவீர்”

எனவே பகர்ந்தார் இளைஞர் சங்கரர் ;

“அப்பா மகனேஎன் அருமைச் செல்வமே!

இப்போ துனைநான் பிரிந்தெங்ஙன் வாழ்வேன்?

உன்னைத் தவிர உறுதி வேறுண்டோ?

தன்னந் தனியாய்த் தவிக்கவே விடாதே!”

என்று வருந்தினாள் ஏங்கியே தாயும்;

ஒன்றிய தாயின் சொற்கேட்டுச் சங்கரர்

“வருந்தாதீர், அம்மா! வேறுதுணை இலையென;

அருந்தவப் பயனும் அவலமே யாகாது; அன்னைக் குரிய அந்திக்கன் மங்களைச் சொன்ன முறைப்படி நிச்சயம் செய்வேன்;

சன்மார்க்க வழியில் சந்நியாசம் ஏற்கச்

சடுதியி லெனக்கு விடைதந் திடுவீர்”

எனவே புகல, மனமிளகித் தாயும்

புத்திரன் பிழைத்தால் போதுமென் றெண்ணி

உத்தரம் தந்தாள் உதவினள் துறவு. (4/20)

ஸ்ரீசங்கர விஜயம் – 3

ஸ்ரீசங்கர விஜயம்

பேராசிரியர்

ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி.,

(ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)

கனகதாரா ஸ்தவம் இயற்றியது

குருகுல வாசம் செய்யுமந் நாளில்

ஒருசிறு சம்பவம் நிகழ்ந்தது கேளீர்;

அந்தணர் ஒருவர் அவர்மிக ஏழை,

உஞ்ச விருத்தியில் உயிர்வாழ்ந்து வந்தார்;

பிரம சரிய முறையின் படியே

நிர்மல சங்கரர் பிக்ஷை யேற்க

அந்தணர் இல்லம் அருகில் நின்றார்;

வந்தனள் மறையோன் மனையாம் நங்கை

பவப்பிணி நீக்கும் பாலன் முகத்தைத் தவப்பெரும் பயனால் கண்டு களித்தாள்;

அவசர மாகவே அகமெங்கும்

ஓடினாள் ;

பிக்ஷைய ளிக்கப் பக்ஷணம் ஒன்றும்

தக்ஷணம் காணாது தவியாய்த் தவித்தாள்;

நெல்லிக் கனியொன்று கையிற் கிடைத்ததை

மெல்லியல் அன்புடன் இட்டனள் பிக்ஷையாய்

அய்யன் கண்டான் அவள்தன் அன்பை; மெய்யான கருணை மிகக்கொண்டான் உடனே;

அந்தணர் தம்பதியை ஆட்கொண்ட வறுமையை

அப்பொழுதே போக்கிட ஆர்வம் கொண்டான்.

மனத்திலே நினைந்தான் மகாலக்ஷ்மி யன்னையை

கணமதே சொரிந்தான் கனகதா ராஸ்தவம்

தங்கக் கனிகள் பொழிந்தன அங்கே ; பொங்கிய செல்வம் பொலிந்தது இல்லம்.(3/20)

சோழர் கல்வெட்டில் பகவத்பாதீயம் சாரீரகபாஷ்யம்

டாக்டர்.குடவாயில் பாலசுப்ரமணியன்

சோழமாதேவி ஸ்ரீகயிலாயமுடையார் கோயிலில் வீரராஜேந்திர சோழன் காலத்தில் ஸ்ரீசங்கர பகவத்பாதர்களின் ப்ரஹ்ம ஸூத்ரபாஷ்யம் – பகவத்பாதீயம் என்னும் சாரீரக பாஷ்யத்திற்கு ப்ரதீபகம் ஆகிற வார்த்தீகம் வக்காணிக்கப்பட்டதைக் குறிப்பிடும் பழைய சிலாசாசனம் பற்றிய ஆய்வுக்கட்டுரை இது.

இதிற் காணும் ப்ரதீபகம் என்னும் விரிநூலை ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் ஆசார்யராக விளங்கிய ஸ்ரீசிதானந்தரே இயற்றினர் என்பதை நிறுவுகிறார் இக் கட்டுரையாசிரியர்.

சோழவளநாட்டில் ஸ்ரீசங்கராசார்யரின் ப்ரஹ்ம ஸூத்ர பாஷ்யம் மற்றும் அவர்களின் வழிவந்த ஸ்ரீகாமகோடி பீடத்தின் ஆசார்யரான ஸ்ரீசிதானந்தேந்த்ர ஸரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகளின் ப்ரதீபகம் என்னும் வார்த்தீகம் ஆகியன அக்காலத்தில் வெகுவாக வழங்கி வந்துள்ளமை இதனால் உணரப்படும்.

சோழர் கல்வெட்டில் பகவத்பாதீயம் சாரீரக பாஷ்யம்

டாக்டர்.குடவாயில் பாலசுப்ரமணியன்

சோழமாதேவி ஸ்ரீகயிலாயமுடையார் கோயிலில் வீரராஜேந்திர சோழன் காலத்தில் ஸ்ரீசங்கர பகவத்பாதர்களின் ப்ரஹ்ம ஸூத்ரபாஷ்யம் – பகவத்பாதீயம் என்னும் சாரீரக பாஷ்யத்திற்கு ப்ரதீபகம் ஆகிற வார்த்தீகம் வக்காணிக்கப்பட்டதைக் குறிப்பிடும் பழைய சிலாசாசனம் பற்றிய ஆய்வுக்கட்டுரை இது.

இதிற் காணும் ப்ரதீபகம் என்னும் விரிநூலை ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் ஆசார்யராக விளங்கிய ஸ்ரீசிதானந்தரே இயற்றினர் என்பதை நிறுவுகிறார் இக் கட்டுரையாசிரியர்.

சோழவளநாட்டில் ஸ்ரீசங்கராசார்யரின் ப்ரஹ்ம ஸூத்ர பாஷ்யம் மற்றும் அவர்களின் வழிவந்த ஸ்ரீகாமகோடி பீடத்தின் ஆசார்யரான ஸ்ரீசிதானந்தேந்த்ர ஸரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகளின் ப்ரதீபகம் என்னும் வார்த்தீகம் ஆகியன அக்காலத்தில் வெகுவாக வழங்கி வந்துள்ளமை இதனால் உணரப்படும்.

ஸ்ரீசங்கர விஜயம் – 2

பேராசிரியர்

ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி.,

(ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)

இளமை

மூன்றாம் வயசு முழுதும் நிரம்புமுன் சான்றோன் சங்கரன் பாஷைபல பகர்ந்தான்;

ஐந்தே ஆண்டுகள் கடக்கும் முன்னமே மைந்தனும் கற்றான் சாத்திர மனைத்துமே ;

இந்த நிலையில் தந்தை சிவகுரு

மைந்தனை விட்டு மண்ணுலகு நீத்தார்;

தனித்து நின்ற தாய்ஆர் யாம்பிகை

தனயன் தனக்குத் தந்தையு மானாள் ;

உரிய காலத்தில் உறவினர் உதவியால்

உபநயனம் செய்வித் துள்ளம் மகிழ்ந்தாள் ;

வேதாப் பியாசம் விதிப்படி செய்யவும் வேண்டிய பலப்பல வசதிகள் செய்தாள்;

மாதாவே தெய்வமென மதித்தார் சங்கரர்;

வேதாக மங்கள் ஒதுவது மானார் ;

அன்னையிடம் சங்கரர்க் களவற்ற அன்பு;

அன்பினால் அவர்செய்த அற்புத மனந்தம் ;

நோய்வாய்ப் பட்ட தாயவள் நதிக்குப்

போய்வர இயலாப் பொழுதினி லங்கே

ஆற்றைத்தம் இல்லத்தின் அருகே வாவென

ஆஞ்ஞா பித்தார் அன்னைக்கு உதவ; செல்வனின் ஆணைக்குச் செவிசாய்த் தந்நதி

தெள்ளென ஓடியது வீட்டுவா சலிலே. (2/20)

ஸ்ரீசங்கர விஜயம் – 1

ஸ்ரீசங்கர விஜயம்

பேராசிரியர்

ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி.,

(ஸ்ரீசங்கரஜயந்தி வெளியீடு)

முகவுரை

ஆதி சங்கரர் அடிபணிந் தேநான்

அறிவிற் சிறந்தோர் நிரம்பிய அவையில்

சச்சிதா னந்த ஸ்வரூபமே யான

சங்கரர் சரிதையை, அவர்தம் மகிமையை

அகவற் பாவில் அடியேன் நும்பால்

அறிவிற் சிறியேன் உரைக்கமுன் வந்தேன்;

அன்னப் புள்ளுக்கு அளிக்கும் பாலில்

தண்ணீர் கலந்து தாலத்தி லிட்டால்

உவந்து வந்தப் பாலைப் பருகிக்

கலந்து வைத்த நீரைத் தவிர்த்தலின்

குற்றம் குறைகள் நீவிர் காணில்

சற்றக் குறைகளை அறவே மறந்து

குணமதை மனத்தில் கொண்டுமே என்னை

மனமுவந் தேற்க வேண்டினேன் நும்மை.

நூல்

அவதாரம்

பாரோங்கு புகழ்கொள் பாரத நாட்டில் சீரோங்கும் கேரள தேசப் பகுதியில்

புண்ணியம் மிக்க காலடிப் பதியில்

அண்ணல் சிவகுரு அவர்தம் மனைவி

ஆர்யாம் பிகையெனும் அருங்குண மாது

பூரியர் இவர்செய் அரும்பெரும் தவத்தால்

முக்கண் முதல்வனே சங்கரர் என்று திக்கெலாம் வணங்கத் தோன்றி யருளப்

பெற்றோர் மகிழ்ந்தனர் ; பேரின்ப மெய்தினர் ;

உற்றார் உறவினர் உள்ளங் களித்தனர்;

பரம்பொருள் அம்சமே உருக்கொண்ட சங்கரர்

நிரம்பிய தேசுடன் விளங்கினா ராங்கே.(1/20)