கேள்வியும் பதிலும்

கேள்வியும் பதிலும்

அவர் : “மாதவீய சங்கர விஜயத்தில் ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகளுடைய ஸித்தி ஸ்தலம் கேதாரம்; அங்கிருந்துதான் அவர் கைலாஸம் அடைந்தார் என்று ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டுள்ளது. அவர் திரும்பி வந்ததாக எந்த இடத்திலும் சொல்லவில்லை. அதனால், கேதாரம்தான் ஸித்தி ஸ்தலம். மாதவீய சங்கர விஜயத்தில் இல்லாத எதையும் நாங்கள் ஏற்க மாட்டோம்”.

இவர்: “அப்படியானால் இதற்கு பதில் சொல்லுங்கள். தமது விரிவான திக்விஜய யாத்திரையின் நிறைவாகக் கேதாரம் சென்று அங்கிருந்தே கைலாஸம் அடைந்த ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் திரும்பி வரவேயில்லை என்று கதையை முடிக்கிறீர்கள்.

ஆனால், உங்களுடைய மாதவீயகாரர் சொல்லாதவை-

1. கைலாசத்தில் ஈசனாரின் அருளால் ஸௌந்தர்யலஹரிச் சுவடி அவருக்குக் கிடைத்தமை,

2. ஸ்ரீசந்த்ரமௌலீச்வர ஸ்படிக லிங்கங்களை அவர் பெற்றமை .

ஆனால், இந்த இரண்டு வரலாறுகளும் உங்களுடைய மடத்தில் பழமையாக வழங்கி வரும் ஸ்ரீசங்கராசார்ய அஷ்டோத்தர சதநாம அர்ச்சனைக் கோவையில்

सौन्दर्यलहरीमुख्यबहुस्तोत्रविधायकाय नमः

कैलासयात्रासम्प्राप्तचन्द्रमौलिप्रपूजकाय नमः

என்பனவாகக் காண்கின்றதை யாவரும் அறிவார்கள்.

ஸ்ரீஸௌந்தர்யலஹரீ ஸ்தோத்ரம், ஸ்ரீசந்த்ரமௌலீச்வர லிங்கங்கள் ஆகியவற்றை ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாசார்யர் பெற்றுக் கொண்டு, கைலாஸத்திலிருந்து திரும்பி வந்தனர் என்கிற மிக முக்கியமான சங்கர விஜய வரலாற்றுச் சம்பவங்களை, அன்றாடம் உங்களுடைய வழக்கத்தில் இருக்கும் பாரம்பர்ய அர்ச்சனைக் கோவை வாயிலாக ஏற்கனவே நீங்கள் ஏற்றிருப்பதால் ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகளுடைய ஸித்தி ஸ்தலம் கேதாரம் என்ற மாதவீய சங்கர விஜயக் கருத்தை நீங்களாகவே நிராகரித்து விட்டீர்கள். பின் எதற்கு இந்த கேதாரத்தில் ஸித்தி என்கிற நகைப்புக்குரிய வீண் வாதம்?”

மாதவீய சங்கர விஜயம் பலவற்றைச் சொல்ல விட்டிருக்கிறது.

श्रीचक्रात्मकताटङ्कतोषिताम्बामनोरथाय नमः

என்று மேற்சொன்ன அர்ச்சனைக் கோவையில் உள்ள வரலாற்றைக் காஞ்சி மடம் ஏற்கிறது. ஆனால், திருவானைக்காவில் தாடங்க ப்ரதிஷ்டை செய்த வரலாற்றை மாதவியகாரர் சொல்லவேயில்லை. அவரால் சொல்லப்படாத காஞ்சியில் ஸ்ரீகாமகோடி பீடம் ஸ்ரீமடம் ஸ்தாபனம், யோகலிங்க ப்ரதிஷ்டை, ஸர்வஜ்ஞ பீடாரோஹணம், அங்கேயே ஸித்தியுற்றது என்பனவற்றை ஏற்க மறுக்கும் நீங்கள் பிறகு ஏன் மாதவீயத்தில் இல்லாத ஜம்புகேஶ்வரம் தாடங்க ப்ரதிஷ்டை உரிமை கோரி இரண்டு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து அனாவசியமாக மெனக்கெட வேண்டும்?

Discussion

பொது விவாதம் : கோரிக்கை

துங்கா மடம் சுவாமிகளின் சார்பில் 1844ஆம் ஆண்டு திருவானைக் கோவில் ஸ்ரீஅகிலாண்டேஶ்வரீ அம்பாளுக்குத் தாடங்க ப்ரதிஷ்டை செய்யத் தமக்கு மட்டுமே உரிமை இருப்பதாகக் கூறி திருச்சிராப்பள்ளி சதர் அமீன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அசல் 95ஆம் எண் வழக்கில் கீழ்க்கண்ட இரண்டு முக்கிய வாதங்கள் ஸ்ரீசங்கர விஜயம் மற்றும் இதர தரவுகள் அடிப்படையில் அவர்களது தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டன.

முதலாவது :-

கலியுகம் பிறந்து 3000 வருஷத்திற்குப் பின் விக்ரமாதித்யன் ராஜரீகத்தில் ஸ்ரீசங்கரபகவத்பாதர் கேரள தேசத்தில் அவதாரம் செய்தார்.(அதாவது கலி தொடக்கம் பொ.யு.மு. 3201இதில் 3000 ஆண்டுகள் சென்றது போக பொ.யு.மு. 201ஆம் ஆண்டு).

இரண்டாவது:-

காசியில் தம்மை தரிசித்த ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமிகளுக்கு 5 லிங்கங்களை ஸ்ரீவிஶ்வநாதர் கொடுத்தார்.

துங்கா மடம் ஸ்ரீநரசிம்ம பாரதி சுவாமிகளும் அவருடைய சிஷ்ய ப்ரசிஷ்யர்களும் இவற்றை அக்காலத்தில் மறுக்காமல் ஏற்று வந்துள்ளனர்.ஆனால், மிகச் சமீபகாலமாக ஸ்ரீசங்கராசார்யர் அவதார காலம் பொ.யு 788; அவர் ஈசனாரிடமிருந்து 4 லிங்கங்கள் மட்டுமே பெற்றார்; அவற்றை 4 ஆம்னாய மடங்களிலும் கொடுத்தார்; இவற்றுக்கு அங்கே பூஜை நடப்பதாக முற்றிலுமாக மாற்றிப் பொது ஊடகங்களில் புதுப் பிரச்சாரம் செய்வது ஏன்? ஸ்ரீபகவத்பாதாசார்யர்களின் அருள் வரலாற்றை இவ்வாறு துங்கா மடத்தினர் மட்டும் தங்கள் மனம்போனபடி மாற்றிக் கொண்டது ஏன் என்கிற விஷயத்தில் பொது விவாதம் நடத்த மாதவிய-மடாம்னாய கூட்டணி பண்டிதர்கள் முன் வருவார்களா?

FAQ

கேள்வி : சிருங்கேரி என்ற பெயரொட்டுடன் “துங்கபத்ரா தீரவாஸி” என்ற பிருது அடைமொழியைப் பயன்படுத்தி வரும் அத்வைத மடங்களுள் பூகோளரீதியாக உண்மையாகவே துங்கபத்ரை ஆற்றின் கரையில் இருக்கும் மடங்கள் எத்தனை? அவை யாவை?

பதில்: புவியியல் அடிப்படையில் இரண்டு மடங்கள் மட்டுமே உண்மையான துங்கபத்ரா தீரவாஸிகள் என்று கருதத் தக்கன.

அவையாவன, தக்ஷிணாம்னாய கூடலி சிருங்கேரி மற்றும் ஹம்பி விரூபாக்ஷ சிருங்கேரி மடங்கள் ஆகும்.

कैलासयात्रासम्प्राप्तचन्द्रमौलिप्रपूजकाय नमः

கைலாஸயாத்ராஸம்ப்ராப்த சந்த்ரமௌலிப்ரபூஜகாய நம:

கைலாஸ யாத்திரையின்போது ஈசனாரிடமிருந்து தாம் பெற்று வந்த ஸ்ரீசந்த்ரமௌலீச்வர ஸ்படிக லிங்கங்களை பூஜிப்பவராகிய ஜகத்குரு ஸ்ரீசங்கர பகவத்பாதர்கள் அவர்களைப் போற்றும் அழகிய நாமா ஒன்று ஸ்ரீகாமகோடி பீடத்தின் பாரம்பர்ய ஸ்ரீசங்கராசார்ய அஷ்டோத்தர ஶதநாமாவளி – அர்ச்சனைக் கோவையில் உள்ளதை அனைவரும் அறிவோம்.

தமது வாழ்க்கையின் முடிவாக ஸ்ரீசங்கர பகவத்பாதர் கேதாரத்திலிருந்து கைலாஸம் போய்விட்டார். ஈசன் எந்த ஸ்படிக லிங்கத்தையும் அவருக்கு அப்போது கொடுக்கவில்லை. கயிலை மீண்ட அவர் அங்கிருந்து திரும்பி வரவுமில்லை.

அதனால் ஐந்து ஸ்படிக லிங்கங்களை அவர் சிவபெருமானிடமிருந்து பெற்று வந்ததாக ஆனந்தகிரி சங்கர விஜயம், மார்க்கண்டேய ஸம்ஹிதை, மற்றும் சிவரஹஸ்யம் அடிப்படையில் ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் இந்த பாரம்பர்ய வரலாறு நிஜம் அல்ல;

அவர் கேதாரத்திலிருந்து சிவ உருவுடன் எருதேறி சிவ கணங்கள் புடை சூழத் தமது இருப்பிடமாகிய கயிலையை முடிவாக அடைந்து விட்டார்; அவ்வளவுதான் ஸம்க்ஷேப சங்கர விஜயம்.

இதுதான் உண்மையான கதை என்று ஸ்ரீசங்கராசார்யர் வரலாற்றை முடிக்கும் மாதவீய ஆதரவு மடத்துப் பண்டிதர்கள் –

कैलासयात्रासम्प्राप्तचन्द्रमौलिप्रपूजकाय नमः

கைலாஸயாத்ராஸம்ப்ராப்த சந்த்ரமௌலிப்ரபூஜகாய நம:

என்னும் இதே நாமாவை தங்களது மடத்தின் அர்ச்சனைக் கோவையிலும் சேர்த்திருப்பது ஏன்?

ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்யர்களின் காலம் மற்றும் அவர் அருள் வரலாற்றில் கைவைத்தது மட்டுமின்றி ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய அஷ்டோத்தர ஶதநாமாவளிக் கோவையிலும் அனேக புதிய பாட மாற்றங்களைச் செய்த மாதவீய மடாம்னாய பிரசாரகர்கள் இந்த நாமாவை நீக்கிவிட மறந்து விட்டார்கள் போலும்.

कैलासयात्रासम्प्राप्तचन्द्रमौलिप्रपूजकाय नमः

கைலாஸயாத்ராஸம்ப்ராப்த சந்த்ரமௌலிப்ரபூஜகாய நம:

கைலாஸ யாத்திரையின்போது ஈசனாரிடமிருந்து தாம் பெற்று வந்த ஸ்ரீசந்த்ரமௌலீச்வர ஸ்படிக லிங்கங்களை பூஜிப்பவராகிய ஜகத்குரு ஸ்ரீசங்கர பகவத்பாதர்கள் அவர்களைப் போற்றும் அழகிய நாமா ஒன்று ஸ்ரீகாமகோடி பீடத்தின் பாரம்பர்ய ஸ்ரீசங்கராசார்ய அஷ்டோத்தர ஶதநாமாவளி – அர்ச்சனைக் கோவையில் உள்ளதை அனைவரும் அறிவோம்.

தமது வாழ்க்கையின் முடிவாக ஸ்ரீசங்கர பகவத்பாதர் கேதாரத்திலிருந்து கைலாஸம் போய்விட்டார். ஈசன் எந்த ஸ்படிக லிங்கத்தையும் அவருக்கு அப்போது கொடுக்கவில்லை. கயிலை மீண்ட அவர் அங்கிருந்து திரும்பி வரவுமில்லை.

அதனால் ஐந்து ஸ்படிக லிங்கங்களை அவர் சிவபெருமானிடமிருந்து பெற்று வந்ததாக ஆனந்தகிரி சங்கர விஜயம், மார்க்கண்டேய ஸம்ஹிதை, மற்றும் சிவரஹஸ்யம் அடிப்படையில் ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் இந்த பாரம்பர்ய வரலாறு நிஜம் அல்ல;

அவர் கேதாரத்திலிருந்து சிவ உருவுடன் எருதேறி சிவ கணங்கள் புடை சூழத் தமது இருப்பிடமாகிய கயிலையை முடிவாக அடைந்து விட்டார்; அவ்வளவுதான் ஸம்க்ஷேப சங்கர விஜயம்.

இதுதான் உண்மையான கதை என்று ஸ்ரீசங்கராசார்யர் வரலாற்றை முடிக்கும் மாதவீய ஆதரவு மடத்துப் பண்டிதர்கள் –

कैलासयात्रासम्प्राप्तचन्द्रमौलिप्रपूजकाय नमः

கைலாஸயாத்ராஸம்ப்ராப்த சந்த்ரமௌலிப்ரபூஜகாய நம:

என்னும் இதே நாமாவை தங்களது மடத்தின் அர்ச்சனைக் கோவையிலும் சேர்த்திருப்பது ஏன்?

ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்யர்களின் காலம் மற்றும் அவர் அருள் வரலாற்றில் கைவைத்தது மட்டுமின்றி ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய அஷ்டோத்தர ஶதநாமாவளிக் கோவையிலும் அனேக புதிய பாட மாற்றங்களைச் செய்த மாதவீய மடாம்னாய பிரசாரகர்கள் இந்த நாமாவை நீக்கிவிட மறந்து விட்டார்கள் போலும்.