மாதவ-வித்யாரண்யர்: பெயர்க் குழப்பம் – 2

“மாதவர் தாம் இயற்றிய நூல்களில் முதலாம் புக்க ராஜனையே தம்மை ஆதரித்தவராகக் குறிப்பிடுகிறார். ஆனால், வித்யாரண்யர் தொடர்பான சாசனங்கள் இம்மன்னருக்குப் பின்வந்த இரண்டாம் ஹரிஹரன் காலத்தவை (1377-1404) என அறிகிறோம். வித்யாரண்யர் தமது நூல்களுள் எந்த மன்னரைப் பற்றியாவது குறிப்பிட்டுள்ளாரா? அல்லது அங்ஙனம் குறிப்பிடாமல் தவிர்த்திருப்பின் அதன் வரலாற்றுப் பின்னணி ஆகியனவும் ஈண்டு ஆராயத்தக்கவை.

வித்யாரண்யரைப்பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டுகளில், அவருக்கும் விஜயநகர அரசின் தலைநகராக விளங்கிய விஜய நகரத்துக்கும் எவ்விதத் தொடர்பும் காணப்படவில்லை. இத்தகைய வரலாற்றுக் கற்பனை எந்த மரபு அல்லது மடத்தை ப்ரபலப்படுத்த வேண்டி பரப்பப்பட்டது என்பதும் வெள்ளிடைமலை.

‘விஜயநகரம்’ தொடக்கத்தில் வித்யாநகரம்’ (Vidyānagara’) என்றே அழைக்கப்பட்டு வந்தது.

வித்யாதீர்த்தர் (மாதவரின் குரு) என்பாரின் நினைவாக இப்புதிய நகரத்திற்கு இப்பெயர் வழங்கலாயிற்று.

மாதவரும், அவர் தந்தை முதலியோரும் சங்கம அரச பரம்பரைக்கு ஆசிரியர்களாகவும், மந்திரிகளாகவும் விளங்கினர். சங்கம அரசனின் மகன் மாதவரைத் தலைமை அமைச்சராகக் கொண்டு புதிய அரசை நிலைநாட்டியபோது, மாதவர்தம் ஆசிரியரான வித்யாதீர்த்தரை ஸ்ரீகாஞ்சி காமகோடி மடத்தினின்றும் இங்கு அழைத்து வந்திருக்க வேண்டும்.

இதிலிருந்து விளங்குவது என்ன? வித்யாரண்யரைப் புகழும் எண்ணங்கொண்ட பிற்காலத்தவர்கள், அவர் பல்வேறு நூல்களின் ஆசிரியர் என்று கூறிக்கொள்ள, அவரையும் மாதவரையும் ஒருவர்தாம் எனக் கூறினர்போலும்!”

வரலாற்றாசிரியர்கள் பலரும் தமக்குக் கிடைத்துள்ள சான்றுகளிலிருந்து, மாதவரும் வித்யாரண்யரும் ஒருவரே என்பதை முடிவாகத் தெளிவுசெய்ய முடியாது என்ற கருத்தை மேற்கண்டவாறு வெளியிட்டுள்ளனர்.

மாதவ-வித்யாரண்யர்பெயர்க் குழப்பம்

வித்யாரண்யரும் மாதவரும் ஒருவரல்லர் என்று சொல்லும் அறிஞர்கள் முன்வைக்கும் சான்றுகள்:

” வித்யாரண்யரால் ஸ்தாபிக்கப்பட்ட மைஸூர் ராஜ்ய மடங்களில் வித்யாரண்யரைப் பற்றியும், அவருக்கு முன்னும் பின்னும் இருந்த அருளாளர்களைப் பற்றியும் குறிப்பிடும் கல்வெட்டுகள் பல உள்ளன. இவை எவற்றிலும், மாதவரும் வித்யாரண்யரும் ஒருவரே என்று குறிப்பிடவில்லை.

மாதவாசார்யாரையும், அவர் சகோதரரான சாயனரையும் குறிக்கும் சில கல்வெட்டுகளைக் காணும்போது, அவர்களுக்கும் வித்யாரண்யருக்கும். எவ்விதத் தொடர்புமில்லை என்றே கூறவேண்டும்.

மேலும், இவர்களுடைய நூல்களை ஆராய்ந்தாலும், இருவரும் ஒருவரே எனக் கூற முடியாது.

அக் காலத்தில் வாழ்ந்த நூலாசிரியர்களோ, ஒன்றிரண்டு நூற்றாண்டுகளின் பின்னர் வாழ்ந்த ஆசிரியர்களோ இவ்விருவரும் ஒருவர் தாம் எனக் கூறியதாகச் சான்று கிடையாது.

மாதவரைப் பல நூல்கள் எழுதிய சிறந்த ஆசிரியர் என்று சொல்லலாம். ‘பராசர ஸ்ம்ருதி வ்யாக்யம்’ (Parāśara-smţti-vyākhyā), ‘வ்யவஹார மாதவம்’ (Vyavahāra-mādhava), ”காலமாதவம்’ (Kāla-mādhaviya), ‘ முக்தி விவேகம்’ (Jivanmukti-viveka), ‘ஜைமினிய ந்யாயமாலா விஸ்தாரம்’ (Jaiminiya-nyāyamālā-vistara) முதலிய நூல்களை இவர் எழுதியிருக்கிறார். இவரது சகோதரரான சாயனர் (Sāyana) வேதபாஷ்யத்தை (Veda-bhāşya) எழுதியுள்ளார். இருவரும் பெரும் அரசியல்வாதிகளாவர்; இருவரும், விஜயநகர அரசை நிறுவுவதிலும் வளர்ப்பதிலும் பங்குகொண்ட அரசியல்வாதிகள்.

ஆனால், காஞ்சியில் பிறந்த வித்யாரண்யரோ துறவியாக வாழ்ந்து பல அத்வைத மடங்களை கர்நாடகத்தில் ஸ்தாபித்தவராவர் ஆவர். இவர் எழுதியதாக, இரண்டு நூல்களைமட்டுமே கூறமுடியும். அவைகள் ‘பஞ்சதசியும்’, ‘விவரண ப்ரமேய ஸங்க்ரஹமுமே’யாம். வித்யாரண்யர் எந்த சங்கரவிஜயத்தையும் இயற்றினார் அல்லர்.

ஆக, இவ்விருவரும் ஒருவரே என்னும் கூற்றே மிகவும் பிற்காலத்தில் எழுந்ததுதான் என்றும் கூறலாம்.”

Excavation at Kanchi Kamakoti Mutt – DR. R. SUBRAMANIAM (1964)

“An attempt has been made by me in recent years to get an archaeological for this literary picture of Kanchipuram. Earlier the Archaeological Survey of India, Southern Circle, Madras, had excavated a mound in the immediate vicinity of Kanchipuram; But they have not yielded any data which could help in reconstructing the history of the place.

At the instance of His Holiness Jagatguru Sri Sankaracharya of Kamakoti Peeta, a trial trench was sunk by me in the premises of Matha. The dig has been restricted to a single trench measuring 20′ x 20′ with the main object being to get a good vertical sequence of the occupation of the site from prehistoric period to the present day. Fortunately it has supplied us a good sequence which can be chronologically arranged as follows:-

Period I Megalithic (300 B.C.-200 A.D.)

Period II Early Historic Satavahana Early Pallava 200 A.D.- 400 A.D.

Period III Post-Pallava C. 400-1000 A.D. …

The complete plan of structure which appears to be a temple built of brick-laid in lime, and lined cut stone slabs, could not be completely exposed, due to the superimposed modern building.”

ஆசார்யபாத சரணபஞ்சகம் (1931)

மண்டைக்குளத்தூர் என்னும் கிராமத்தில் 24-4-1931 முதல் இரண்டுநாள் கொண்டாடப்பட்ட ஸ்ரீமத் சங்கர ஜயந்தி மகோத்ஸவத்தில் ஸ்ரீவேத வேதாந்தப் பிரகாச மூர்த்தியாக விளங்கும் உலககுரு பரமாசார்யாளாகிய ஸ்ரீ ஆதி சங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்கள் மீது வே. முத்துஸாமி ஐயர். எம். ஏ., எல். டி., துதியாகப் பாடிய ஆசார்யபாத சரணபஞ்சகம் (நேரிசை வெண்பா)

1. காலடிவந் தான்ம உலகம் கடைத்தேறக்
காயிடி தந் தாண்ட கருணமுகில் – ஆலடிவாழ்
சங்கரர்தம் கூறாகத் தரணிபுகழ்
சற்குருஸ்ரீ சங்கரர் பூம் பாதம் சரண்.

2.சாரலர்தம் வாதமெலாம் தர்க்கமுறை யால்தகர்த்துப்
பாரிலக ஆறுமதம் பாலித்து – நேரிழையோர்
பங்கார் தங் கூறாகப் பார்வந்த
தெய்வகுரு சங்கரர் பூம் பாதம் சரண்.

3. இமய முதற் சேதுவரை வேதமுழக் கெங்கும்
அருமையும்வகை ஐந்துமடம் நாட்டும் –நமையாளும்
ஐங்கரர்தந் தைகூறா அம்புவி போற் றான்றகுரு
சங்கரர் பூம் பாதம் சாண்.

4. மலையுச்சித் தீபமென மாண்பார் அத்வைத
நிலை மெச்ச ஓங்கி நிலவத் – தலைமைச்சீர்
பொங்கரார்தங் கூறாப் புவியுய்யப் போந்தகுரு
சங்கரர் பூம் பாதம் சரண்.

5. விலை மதிக்க வொண்ணாத வேதாந்த உண்மை
கலை மதியார் கண்டு கதி காணத்- தலைமதியம்
தங்கார்தங் கறாச் சகத்தொளிரும் ஞானகுரு
சங்கரர் பூம் பாதம் சரண்.

இங்ஙனம்,

ஸ்ரீபரமாசார்யாள் திருவடிக்கு வழிவழித்தொண்டு

பூண்டொழுகும், தாஸன்,

வே. முத்துஸாமி ஐயன். எம். ஏ., எல். டி., பால பாடசாலைப் பரிசோதகன் போளூர்,

வட ஆற்காடு ஜில்லா.

கும்பகோணத்துடன் ஸ்ரீபகவத்பாத சங்கரரின் தொடர்பு : ஒரு ஆய்வு (நிறைவுப் பகுதி)

பழம் பெயர்களுடன் புதுக் குடியேற்றங்கள் : சான்றுகள்

இங்கிலாந்திலிருந்து 16-ஆம் நூற்றாண்டு முதல் அமெரிக்க நாட்டில் புதிதாகக் குடியேறியவர்கள் தங்கள் புதுக்குடியேற்றங்களுக்கு, தாங்கள் முன்னர் இங்கிலாந்தில் வசித்த ஊர்களின் பெயர்களைக் கொடுத்துள்ளது, அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ‘யார்க்’, ‘ப்ளிமத்’, ‘ஹாலி பாக்ஸ்’, ‘போர்ட்ஸ்மத்’ என்ற ஊர்கள் இன்றும் இருப்பதிலிருந்து தெளிவாகும்.

இதேபோல் தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரத்தில் குடியேறினதால் ‘புதூர்’, ‘பேரூர்’ போன்ற பெயர்கள் ஆந்திரத்தில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காலடிக்கருகில் பாயும் நதிக்கு நவீனப் பெயர் ‘ஆல்வாய்’. இந்நதியின் அருகே காலடிக்கு சுமார் 12 மைல்களுக்கு அப்பால் இந்நதியின் பெயரையே கொண்டு ஒரு தொழிற்சிறப்பு நகரம் இன்றும் உள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள மதுரையின் வழியே பாயும் திருவிளையாடற்புராணத்தில் காணப்படும் காரணம் கொண்டு ‘வைகை’ என்றழைக்கப்படும் நதியும், கேரளத்தில் பாயும் ஆல்வாய் நதியும் உற்பத்தியாகும் இடங்கள் ஒரே மலையில் ஒன்றுக்கொன்று மிக அருகில் உள்ளன. வைகை நதிக்கரையில் உள்ள மதுரை மாநகருக்குச் சைவத் திருமுறைகளிலும்,பிறதமிழ் இலக்கியங்களிலும், ‘ஆலவாய்’ என்ற பெயர் உள்ளதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. ஸம்ஸ்க்ருத நூல்களில் மதுரை ‘ஹாலாஸ்யம்’ என்று கூறப்படுகிறது.

மேலே உள்ள பகுதிகளில் கூறப்பட்டுள்ள விவரங்கள் யாவற்றையும் ஒன்று சேர்த்து, கூர்ந்து கவனித்தால், ‘சிவபுரம்’ முதலிய இடங்களிலிருந்து தமிழர் கேரளத்திற்குக் குடியேறினர் என்பது தெளிவாகும்.

கும்பகோணத்துடன் ஸ்ரீபகவத்பாத சங்கரரின் தொடர்பு : ஒரு ஆய்வு (இரண்டாம் பகுதி)

காலடி – பெயர்க்காரணம்

ஸ்ரீசங்கரர் பிறந்த ஊருக்குக் ‘காலடி’ எனப் பெயர். இப்பெயர் பிற்காலத்தில் ஏற்பட்ட காரணப்பெயர் எனலாம்.

சிவரஹஸ்யம் போன்ற சில பண்டைய நூல்களில் சங்கரர் பிறந்த ஊருக்கு “சசாலம்” அல்லது “சாலக்கிராமம்’ ” எனப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீசங்கரருக்குப் பகவத்பாதர் என்ற சிறப்புப்பெயர் உள்ளது. இதற்கு ‘ஈசனடி’ என்று பொருள். ஈச்வராம்சமாகப் பிறந்தவரின் அடிச்சுவடு பட்டதால் புனிதம் பெற்றதாலேயே அவ்வூருக்கு ‘காலடி’ என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். காலடி என்பதும் ஒரு தமிழ்ப் பெயராகத்தான் தோன்றுகிறது.

சிவபுரத்தில் ஸ்ரீசங்கரரின் மூதாதையர்

ஸ்ரீசிவகுருவின் தகப்பனாரின் முன்னோர்கள் கும்பகோணத்தை அடுத்த சிவபுரவாசிகளாக இருந்திருக்கக் கூடும். அதனாலேயே, ஸ்ரீசிவகுருவின் பெற்றோர்கள் தங்கள் மகனுக்கு, ‘சிவகுரு’, என்று தங்கள் மூதாதையரின் ஊரான குடந்தையை அடுத்துள்ள சிவபுரத்தின் ஈசனார் ஸ்ரீசிவகுருநாதரின் பெயரைச் சூட்டியுள்ளனர். (2/3)

கும்பகோணத்துடன் ஸ்ரீபகவத்பாத சங்கரரின் தொடர்பு : ஒரு ஆய்வு (முதற் பகுதி)

கும்பகோணத்துடன் ஸ்ரீபகவத்பாத சங்கரரின் தொடர்பு : ஒரு ஆய்வு (முதற் பகுதி)

ஸ்ரீபகவத்பாத சங்கராசார்யரின் தகப்பனார் ஸ்ரீசிவகுரு ஆவர். ஸ்ரீசிவகுரு தன் மனைவியுடன் திருச்சிவப்பேரூரில் (தற்காலம் திருச்சூர்) மகப்பேறு வேண்டித் தவம் இருந்தார். அவருடைய ஊர் காலடி என்பதாகும்.

திருச்சிவபுரம்

கும்பகோணத்திற்கு சுமார் மூன்று மைல் தென்கிழக்கில், ‘திருச்சிவபுரம்’ என்ற சிவத்தலம் உள்ளது. இது ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் முதலியோரால் போற்றப் பட்டது. இது மிகப் புராதனக்கோயில். இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு “ஸ்ரீசிவகுருநாதர்” எனப்பெயர். ‘சிவகுருநாதன்’ என்றும் ‘சிவகுரு’ என்றும் பெயர் பூண்ட சைவர்கள் பலர் இன்றும் கும்பகோணத்திலும், அதன் சுற்றுப்பகுதியிலும் உளர்.

கேரளத்தில் தமிழர் குடியேற்றம்

ஸ்ரீபரசுராமர் தென்னாட்டை அடைந்து, கேரளத்தில் தமிழர் பலரைக் குடியேற்றுவித்தார் எனச் சொல்லப்படுகிறது. பிற்பாடு கி.மு. 6-ஆம் நூற்றாண்டின் முன்னரே கேரளத்திற்கு தமிழர்கள் பெருமளவில் சென்று குடியேறினர் என ஊகித்தறியப்பாலது.

இன்னும் சிவபுரத்தைச் சுற்றியும், காலடியையும், திருச்சிவப்பேரூரையும் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாத்தூர், சேதினீபுரம், சந்திரசேகரபுரம், *கருக்குடி, கண்டியூர் என ஒரேவிதமான பெயர்களைக் கொண்ட பல ஊர்கள் உள்ளன.

(*கும்பகோணத்தை அடுத்த மருதாநல்லூருக்கு கருக்குடி என்னும் பழம் பெயர் உண்டு. கேரளத்தில் இருக்கும் கருக்குடி, காலடிக்கு சமீபமாக உள்ள அங்கமாலிக்கு அடுத்த கருக்குட்டி என்ற ரயில் நிலையம் ஆகும்.)

(1/3)

ஸ்ரீசங்கரபகவத்பாத பூஜாவிதி

ஸ்ரீசங்கரபகவத்பாத பூஜாவிதி

ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் ஸ்ரீமடம் ஸம்ஸ்தானம் கோசத்திலிருக்கும் ப்ராசீன க்ரந்தங்களைப் பரிசீலித்து ஸ்ரீமடம் ஆஸ்தான பண்டிதர்களின் மேற்பார்வையில் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

” இது காறும் ஆஸ்திகப் பெருமக்கள் ஸ்ரீசங்கர ஜயந்தீ ஸமயத்தில் ஸ்ரீபகவத்பாதரைப் பூஜிப்பதற்கான நல்ல முறைப்படி உள்ள பூஜாவிதி கிடைக்காமலிருந்த குறை இப்பொழுது நீங்கியது.

இந்த பூஜாவிதி கல்பம், ப்ராசீன கிரந்தங்களிலிருந்து, சிறந்த பண்டிதர்களால் தொகுத்து பரிசோதிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திகர்கள் ஓவ்வொருவர் வீட்டிலும் இந்த கல்ப புஸ்தகம் இருக்க வேண்டியது மிக அவசியம். இதில் கூறப்பட்டுள்ள முறைப்படி ஸ்ரீசங்கர பகவத்பாதரைப் பூஜித்து குருவின் கருணைக்கு பாத்திரர்களாகி, ஸகல ச்ரேயஸ்ஸையும் அடைய வேண்டுமாகக் கோருகிறேன்”.

– சாஸ்த்ர ரத்னாகர போலகம்,

ஸ்ரீராம சாஸ்திரிகள்

ஸ்ரீசங்கர விஜயம்- 10

ஸ்ரீசங்கர விஜயம்

மண்டனமிச்ர விஜயம்

பேராசிரியர்

ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி.,

(ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)

அப்படியே ஆகச் சங்கரர் அமைய,

ஆரணங்கு வாதிக்க ஆயத்த மானாள்;

ஆசாரியர் சிறிதும் அறியாத் தர்மம்

கிரகஸ் தாசிரமம் என்பதைப் பற்றி

விரைவில் வெகுவாய் வினவ லானாள்;

அதனைக் கேட்ட சங்கரர் தவணை

ஆறு மாதம் அளிக்கக் கேட்டார்;

சீர்மிகு மாதவள் நேர்மை யாகவே

பார்புகழ் சங்கரர்க்குத் தவணை தந்தாள்;

மத்திய தேசத்தில் மன்னன் அமருகன்

மண்ணுலகு விட்டு விண்ணுல கேகினான்.

மன்னன் தேகத்தில் தன்னாவி புகுத்துத்

தாமிது வரையில் அறியா திருந்த

தருமமே யான கிரகஸ்தா சிரமத்தை

ஏற்க நினைந்தார் எம்பெரு மானவர்;

சிறியதொரு குகையில் சீடர்க ளிடையில்

தன்னுடல் விட்டு மன் னுடல் புகுந்தார்;

மன்னன் எழுந்தான், மக்கள் மகிழ்ந்தனர்;

அன்னவ னுடன் அரண்மனை யேகினர்

பட்ட மகிஷியும் பரமகிழ் வுற்றாள்;

திட்டமுடன் நாடு செழித்தோங் கிடவே

மாதமும் மாரி மழைபொழிந் ததுவே ;

தேச மக்களும் க்ஷேமம தெய்தியே

நேசம் மிகக்கொடு களிப்புற்று வாழ்ந்தனர்;

மகானின் வரவினால் மாறிய நிலைமையை

மன்னர் மனைவி மனத்திலே யுணர்ந்தாள் ; (10/20)

No photo description available.

ஸ்ரீசங்கர விஜயம் — 9

ஸ்ரீசங்கர விஜயம் மண்டனமிச்ர விஜயம் பேராசிரியர் ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி., (ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)

திக்விஜயம் செய்த தீரர் சங்கரர்
திகழுயர் சீடர் சிலபே ருடனே
கர்மமார்க் கத்தைக் கனதீ விரமாய்க் கையாண்டு வந்த மண்டன மிச்ரர்
மிளிர்ந்த பட்டணம் மாகிஷ் மதிக்கு
வந்தே அவரை வாதுக் கழைத்தார்;
சாக்ஷாத் சரஸ்வதி தேவியே யங்கு
ஸரஸ வாணியெனும் பெயர்ப்பெண் மணியாய்
மண்டன மிச்ரரின் மனைவியாய் விளங்கினாள்
ஈண்டிவர் வாதத்தைக் கண்டு களிக்கவே
வேண்டினர் அவளை நியாயம் வழங்கி
வெற்றி தோல்வி விளித்துக் கூற ;
தன்நிலை யறிந்த தேவி யவளும்
உன்னிப் பார்த்தோர் உபாயம் செய்தாள்;
மங்கை யிரண்டு மாலைகள் கொணர்ந்து
அங்கவ ரிடமே அளித்துச் சொன்னாள்;
மலர்மாலை தனையே மார்பி லணிந்து
புலவர் நீவீர் தொடங்குவீர் வாதம் ;
தோற்றவர் மாலை துவண்டு வதங்கும்,
ஏற்போம் அதனை நாம் இறுதிமுடி வாக
மதிவாண ரிருவரும் மனமுவந் தங்கே
விதிப்படி வெகுநாள் வாதம் நடத்தினர்;
மண்டன மிச்ரரின் மாலை வாடவே
கண்டனள் சரஸ வாணியு மதனை ;
“என்றன் கணவருக்கு யானோர் அடிமை,
என்னையும் ஜயிப்பது உமக்கே கடமை;
அதில்நீர் தவறினால் அவரை வென்றது
மதிக்கத்தகா” தெனமாதவள் உரைத்தாள், (9/20)